மேலும் அறிய

Parliament: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. மாநிலங்களவையில் இன்று விவாதம்..

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது இன்று மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்படுகிறது.

வழக்கமாக நாடாளுமன்றம் 3 முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று பிரிவுகளாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.  18 ஆம் தேதி தொடங்கி நாளை வரை இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுகிறது. சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமாக மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடுக்கான மசோதா  நேற்று முன்தினம் அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் என பலர் மத்திய அரசுக்கு பாராட்டைத் தெரிவித்தனர். இந்த மசோதா மீதான விவாதம் நேற்று மக்களவையில் தொடங்கியது.

இந்த விவாத்ததில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ”என் வாழ்க்கையில் இது ஒரு வருத்தமான தருணம். என் வாழ்க்கை துணை ராஜீவ்காந்தி, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்ட திருத்த மசோதாவை முதல்முறையாக கொண்டு வந்தார். அந்த மசோதா, மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் 7 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், அந்த மசோதா 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்த மசோதாவை அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள் எனவும், இன்றே இந்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல் நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் அவர் பேசினார். 

விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த மசோதா நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், கொள்கை வகுப்பதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும். இன்று உலகளவில் பெண் விமானிகள் 5 சதவீதமாக உள்ளனர். ஆனால், இந்தியாவில் 15 சதவீதமாகவும் உள்ளனர்.  பெண்கள், ஆண்களுக்கு சமம் என மசோதா மீதான விவாதத்தில் பேசிய பல பெண் எம்.பிக்கள் கூறினர். ஆனால், ஆண்களை விட பெண்கள் திறமைசாலிகள் என்று நான் கூறுவேன். பெண்களுக்கான பாதுகாப்பு, மரியாதை மற்றும் பங்கேற்பு, இந்த நாட்டின் பிரதமரான பிறகு மோடியால் வழங்கப்பட்டுள்ளது” என   குறிப்பிட்டுள்ளார்.  

பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்த பின் இந்த மசோதா மீது  ஓட்டெடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர். 2 எம்.பி.க்கள் மட்டும் எதிராக வாக்களித்தனர். இதனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இதுவே ஆகும். இதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்படுகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget