மேலும் அறிய

Atrocities On Dalits : திருடியதாக சந்தேகம்.. தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து, மேலே சிறுநீர் கழித்த கொடூரம்

மகாராஷ்டிராவில் திருடியதாக சந்தேகப்பட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 4 பேர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் திருடியதாக சந்தேகப்பட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 4 பேர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான வீடியோ:

மகாராஷ்டிரா மாநிலம் அகமதபாத் அடுத்து உள்ள ஹரேகான் எனும் ஒரு சிறிய கிராமத்தில் எடுக்கப்பட்டதாக, வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கோழி மற்றும் ஆடு திருடியதாக இளைஞர் ஒருவரை பிடித்து, மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டுள்ளனர். அதோடு, 6 பேர் கொண்ட கும்பல் அந்த நபரை சூழ்ந்து கையில் குச்சியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தன. அங்கு கடையடப்பு போராட்டங்களும் நடைபெற்றன.

திடுக்கிடும் தகவல்:

இதனிடையே, காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபரை தேடி வந்த நிலையில், அவரே காவல்நிலையம் வந்து சம்பவம் தொடர்பாக புகாரளித்துள்ளார். அதில், ”அந்த கும்பல் என் கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அடித்து துன்புறுத்தியது. என்னுடன் சேர்த்து மேலும் 3 சிறுவர்களும் அவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான். அவர்கள் எங்கள்மீது சிறுநீர் கழித்தனர். இன்னும் பல கேவலமான செயல்களை எங்களை செய்ய வைத்தனர். நாங்கள் 4 பேரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை தாக்கியது யுவராஜ் கலண்டே, மனோஜ் போடகே, பப்பு பார்கே, தீபக் கெய்க்வாட், துர்கேஷ் வைத்யா மற்றும் ராஜு போரேஜ் ஆகியோர் தான்.  இந்த சம்பவம் அனைத்தும் யுவராஜ் கலண்டே வீட்டில்தான் நிகழ்ந்தது” என தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி “கடந்த 25ம் தேதியன்று ஸ்ரீரம்பூர் பகுதியில் உள்ள ஹரேகன் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் இடத்திற்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல், கட்டாயப்படுத்தி மிரட்டி 4 பேரை அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ஆடு மற்றும் கோழிகளை என திருடினீர்கள் என கேட்டு, சட்டையை கழற்றி மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்த கும்பலை சேர்ந்த ஒருவனே, இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக படம்பிடித்துள்ளான். சம்பவம் தொடர்பாக கடத்தல், கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: 

பிற்படுத்தப்பட்ட மக்களை காப்பாற்ற பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அவர்கள் தூண்டிவிட்ட வெற்று அரசியல் தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget