மேலும் அறிய

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 78 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்ட மூத்த எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மேலும் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய்  உள்ளிட்ட மூத்த எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்பிக்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இச்சூழலில், அதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் 30 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை தவிர்த்து மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கல்யாண் பானர்ஜி, ராஜா, தயாநிதி மாறன், அபரூபா போடர், பிரசூன் பானர்ஜி, முகமது பஷீர், ஜி.செல்வம், சி.என். அண்ணாதுரை, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, டாக்டர். டி. சுமதி, கே. நவாஸ்கனி, கலாநிதி வீராசாமி, என்.கே. பிரேமச்சந்திரன், சவுகதா ராய், சதாப்தி ராய், அசித் குமார் மால், கௌசலேந்திர குமார், ஆண்டோ ஆண்டனி, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், திருநாவுக்கரசர், பிரதிமா மோண்டல், ககோலி கோஷ் தஸ்திதார், கே. முரளீதரன், சுனில் குமார் மொண்டல், எஸ். ராமலிங்கம், கே.சுரேஷ், அமர்சிங், ராஜ்மோகன் உன்னிதன், கௌரவ் கோகோய், டி.ஆர். பாலு உள்ளிட்டவர்களை சஸ்பெண்ட் செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி  தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை, மொத்தமாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 46 எம்பிக்கள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் விளக்கம்:

தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "நான் உட்பட அனைத்து தலைவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை மீண்டும் பதவியில் அமர்த்தவும், உள்துறை அமைச்சர் சபைக்கு வந்து விளக்கம் அளிக்கவும் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தினமும் தொலைக்காட்சியில் அறிக்கை விடுகிறார். நாடாளுமன்ற பாதுகாப்புக்கு அரசு என்ன செய்கிறது என நாடாளுமன்றத்திலும் கொஞ்சம் பேசலாம். இன்றைய அரசு கொடுங்கோன்மையின் உச்சத்தை எட்டியுள்ளது. விவாதம் தேவை" என்றார்.

எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு விளக்கம் அளித்த மத்திய இணையமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி, "எதிர்க்கட்சியினர் இன்று அநாகரீகமாக நடந்து கொண்டனர். பிரதமர் மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாததாலும், அவையை செயல்பட விடாததாலும் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள். எனவே, அவர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். அதை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம், மக்களவையை திருப்பிப்போட்ட நிலையில், மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுப்பட்ட 46 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 78 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே நடைபெறாத அளவுக்கு மொத்தம் 92 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget