மேலும் அறிய

Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற வீரர்கள் ஆதரவு

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜிபூஷன் சிங் சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். ஷாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகிய வீராங்கனைகளுக்கு பஜ்ரங் புனியா என்ற வீரர் துணையாக களத்தில் போராடி வருகிறார்.

மல்யுத்த வீரர்களுக்கு குவியும் ஆதரவு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷண் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக  விவசாயிகள் களத்தில் குதித்தனர். போராட்டத்திற்கு ஆதரவாக ஜந்தர் மந்தரை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகளுக்கு முக்கிய சீக்கிய அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிரோமணி குருத்வாரா நிர்வாகக் குழு அறிவித்தது.

இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அணி உறுப்பினர் மதன் லால், ''நாட்டுக்காக உழைத்துத் தாங்கள் பெற்ற பதக்கங்களை வீசி எறிய வீராங்கனைகள் முடிவு செய்தது துயரம் மிக்கது. இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளாகிறோம். அரசு இந்த விவகாரம் குறித்துப் பேசி விரைவில் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

Image

வீராங்கனைகளின் போராட்டம் குறித்து அறிக்கை ஒன்றையும்  1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வெளியிட்டுள்ளது. அதில், ’’நம்முடைய மல்யுத்த வீரர்கள் கையாளப்படுவது குறித்த வழக்கத்துக்கு மாறான காட்சிகள், எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளன. கங்கை நதியில் அவர்கள் கஷ்டப்பட்டுப் பெற்ற பதக்கங்களை எறிவது குறித்த அவர்களின் யோசனை குறித்து மிகவும் கவலை கொள்கிறோம். 

அந்தப் பதக்கங்கள் அனைத்தும் வீரர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பு, தியாகம், விடாமுயற்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றால் விளைந்தவை. அவை வீரர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. நாட்டின் பெருமை மற்றும் மகிழ்ச்சியே அந்த பதக்கங்கள். இந்த விவகாரத்தில் வீரர்கள் எந்தவிதமான அவசரமான முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். அவர்களின் குறைகள் காதுகொடுத்து கேட்கப்பட்டு, விரைவில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறோம். நம்முடைய சட்டம் வெல்லட்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டம்; பின்னணி என்ன?

கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறினர். இதனையடுத்து குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.

விசாரணையின் அடிப்படையில் அவர்கள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அந்த அறிக்கையின் விவரத்தையும் கூறவில்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஏப்ரல் 23 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது அவர்கள் டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷண் சிங் மீது புதிதாக புகார் கொடுத்தனர். ஒரு சிறுமி உள்பட மூன்று வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர்.

அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் எஃப்ஐஆர் பதிவு செய்ய வலியுறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பிரிஜி பூஷண் மீது போக்ஸோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனால் வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
ஆதார் அப்டேட்: பெயர், பிறந்த தேதி மாற்ற UIDAI விதித்த வரம்புகள்! முழு விவரம் இதோ..
ஆதார் அப்டேட்: பெயர், பிறந்த தேதி மாற்ற UIDAI விதித்த வரம்புகள்! முழு விவரம் இதோ..
மெட்ரோ நிலையத்தில் பூனைக்கு வேலை.. தலைமை அதிகாரியாக நியமனம்!
மெட்ரோ நிலையத்தில் பூனைக்கு வேலை.. தலைமை அதிகாரியாக நியமனம்!
5 ஆண்டுகளில் ரூ.4.20 லட்சம்... போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் முழு கணக்கு!
5 ஆண்டுகளில் ரூ.4.20 லட்சம்... போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் முழு கணக்கு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Embed widget