மேலும் அறிய

IMA On Covid Precautions: மாஸ்க் போடுங்க, கூட்டம் சேராதீங்க.. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சூழலில் கொரோனா பரவல் என்பது ஆபத்தானது எனும் சூழலில் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதேநேரம், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதை விட வருமுன் காப்பதே சாலச்சிறந்தது. எனவே கொரொனா பரவல் அதிகரிப்பை தடுக்க, பொதுமக்கள் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

அதன்படி, 

  • பொதுஇடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும்
  • தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்
  • சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அல்லது சானிடைசர் மூலம் அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும்
  • திருமணம், அரசியல் மற்றும் சமூக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்
  • உலக நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கலாம்
  • காய்ச்சல், வறண்ட தொண்டை, இருமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகலாம்
  • முடிந்த அளவிற்கு விரைந்து கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுங்கள்
  • சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது அரசு வழங்கும் அறிவுரைகளை பின்பற்றுங்கள் 

என இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

 

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்:

இதனிடையே, பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து, மத்திய சுகாதார அமைச்சர் மண்சுக் மாண்டவியா மக்களவையில் உரையாற்றினார். அப்போது, கடந்த சில நாட்களில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை காண்கிறோம். சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு, அங்கு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆனால், இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை காண முடிகிறது.

கொரோனா தொற்றை நிர்வகிப்பதில் சுகாதாரத் துறை மிகவும் முனைப்பாக உள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது. மாநில அரசுகளுக்கு இதுவரை , 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாஸ்க் அணிய வலியுறுத்தல்:


உலகளவில் தொற்று பரவல் நிலைமையை கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனா தொற்றின் புதிய மாறுபாட்டை சரியான நேரத்தில் அடையாளம் காண மரபணு வரிசைமுறை சோதனையை  அதிகரிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தை அடுத்து, மக்கள் மாஸ்க் அணிவதையும், சானிடைசர்களைப் பயன்படுத்துவதையும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளோம்.

மத்திய அரசு முனைப்பு:


நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளிடையே ரேண்டம் முறையில்  RT-PCR முறையில் மாதிரிகளை சேகரிக்க தொடங்கியுள்ளோம். கொரோனா தொற்றுநோயை முறையாக கையாள அரசு உறுதிபூண்டுள்ளோம், அதற்கான  உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கமளித்துள்ளார்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget