மேலும் அறிய

திருவாரூரில் கடும் பனிப்பொழிவு - காலை 8 மணிக்கு பின்னும் முகப்பு விளக்கை எரியவிட்ட படி பயணிக்கும் வாகன ஓட்டிகள்

பனிப்பொழிவு காரணமாக 25% வரை ஈரப்பதம் ஏற்படும் எனவும், எனவே ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்கு பின்னரும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர். மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருவாரூரில் கடும் பனிப்பொழிவு - காலை 8 மணிக்கு பின்னும் முகப்பு விளக்கை எரியவிட்ட படி பயணிக்கும் வாகன ஓட்டிகள்

திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் முழுவதும் பனி மூட்டத்தின் காரணமாக குளம் முழுவதும் மூடுபனியால் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று சொர்க்கவாசல் திறப்பு காரணமாக திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில் மற்றும் புலிவலம் பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகாலை முதல் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடுமையான பனிப் பொழிவின் காரணமாக கோயிலுக்குச் செல்பவர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வழக்கமாக போகிப் பண்டிகை தினமான இன்று அதிகாலை முதலே கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொங்கல் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி வருவது வழக்கம். ஆனால் இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக கடை வீதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் காட்சியளிக்கிறது. இதனால் சிறு குறு வியாபாரிகள் பொங்கல் பண்டிகையை நம்பி கடை வைத்தவர்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகியுள்ளனர்.


திருவாரூரில் கடும் பனிப்பொழிவு - காலை 8 மணிக்கு பின்னும் முகப்பு விளக்கை எரியவிட்ட படி பயணிக்கும் வாகன ஓட்டிகள்

மேலும் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் அறுவடை பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வயல்களில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் எந்திரங்களும் வயல்களில் இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சம்பா தாளடி நெல் பயிர்கள் அறுவடை பணிகள் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில் இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக அறுவடை பணிகளில் தாமதம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஈரத்துடன் கூடிய நெல் மணிகளை அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அதனை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்ய மாட்டார்கள் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தற்போது நிலவிவரும் இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக 25% வரை ஈரப்பதம் ஏற்படும் எனவும், எனவே ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் நிலைய அதிகாரிகளும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget