மேலும் அறிய

சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு

அரூர் அருகே குறிப்பிட்ட சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சம்பவத்தில் கடையின் உரிமையாளர் தந்தை, மகன் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ்வரன் என்பவர், யோகஷ் என்ற பெயரில் முடிதிருத்தம் கடை நடத்தி வருகிறார். யோகேஸ்வரன், மற்றும் இவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன் இருவரும் பணி செய்து வருகின்றனர்.

முடி வெட்ட மறுப்பு:

இந்நிலையில் நேற்று முன்தினம் கெளாப்பாறை அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டியில் சமூக இளைஞர்  சஞ்சய், (17) என்பவர், முடி திருத்தம் செய்ய, கடைக்கு சென்றுள்ளார். அப்போது நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தபோது, யோகேஸ்வரன் நீ எந்த ஊரு என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த இளைஞர் தான் கெளாப்பாறை என்ற தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு

 

பின்பு கடையின் உரிமையாளர் யோகேஸ்வரன், உங்களுக்கு முடி வெட்ட முடியாது, நீ வேறு எங்கேயாவது வெட்டிக்கொள் என்று திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் சஞ்சய் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் ஒன்றிணைந்து, முடி திருத்தம் கடைக்கு சென்று, என்ன காரணத்திற்காக முடி வெட்ட முடியாது என்று சொன்னீர்கள்? என்று கடை உரிமையாளர் யோகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர். அப்போது யோகேஷ்வரன் உங்களுக்கு(குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் இடத்தை கூறி) முடி வெட்ட முடியாது அவ்வளவுதான் என்று சொல்லி வேறு ஒருவருக்கு முடிவெட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்.

வாக்குவாதம்:

பின்பு யோகேஸ்வரன் தந்தை கருப்பன் (எ) சென்னையன், கடைக்கு வரும் பொழுது அவரிடம் இளைஞர்கள் காரணத்தை கேட்டிருக்கிறார்கள். அப்போது உங்களுக்கு இப்போது மட்டுமல்ல காலம் காலமாக முடி வெட்டுவதில்லை தெரிவித்துள்ளார். அப்போது இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அவர் இப்போதும் முடி வெட்ட முடியாது, எப்போதும் முடி வெட்ட முடியாது. நீங்க எங்கு சென்று புகார் செய்தாலும் அதை பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார்.  அப்போது இளைஞர்கள் கருப்பன் (எ) சென்னையனை பார்த்து சமூக நீதி பேசக்கூடிய திமுகவில் இருக்கின்ற நீங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா? இதை தான் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்களா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. 

தந்தை, மகன் கைது:

அதன் பிறகு நேற்று பாதிக்கப்பட்ட இளைஞர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அரூர் காவல் நிலையத்தில்
பாதிக்கப்பட்ட இளைஞர் சஞ்சய், அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து முடிதிருத்தும் கடை உரிமையாளர் யோகேஸ்வரன், மற்றும் இவரது தந்தை  கருப்பன் (எ) சென்னையன், ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்ததால், யோகேஸ்வரன் மற்றும் தந்தை கருப்பன் (எ) சென்னையன் இருவரையும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அரூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சம்பவம் அரூர் பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பட்டியல் சமூக பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொடுத்ததும், மாட்டிறைச்சியை பேருந்தில் எடுத்து வர கூடாது என சாதிய பாகுபாடுகள் காட்டிய சம்பவம் அரூர் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! ஆகஸ்ட் 3 வரை எந்தெந்த மாவட்டங்களில் ஜாக்கிரதையா இருக்கணும்?
இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! ஆகஸ்ட் 3 வரை எந்தெந்த மாவட்டங்களில் ஜாக்கிரதையா இருக்கணும்?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
காவிரியில் புனித நீராடி...அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Embed widget