மேலும் அறிய

சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு

அரூர் அருகே குறிப்பிட்ட சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சம்பவத்தில் கடையின் உரிமையாளர் தந்தை, மகன் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ்வரன் என்பவர், யோகஷ் என்ற பெயரில் முடிதிருத்தம் கடை நடத்தி வருகிறார். யோகேஸ்வரன், மற்றும் இவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன் இருவரும் பணி செய்து வருகின்றனர்.

முடி வெட்ட மறுப்பு:

இந்நிலையில் நேற்று முன்தினம் கெளாப்பாறை அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டியில் சமூக இளைஞர்  சஞ்சய், (17) என்பவர், முடி திருத்தம் செய்ய, கடைக்கு சென்றுள்ளார். அப்போது நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தபோது, யோகேஸ்வரன் நீ எந்த ஊரு என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த இளைஞர் தான் கெளாப்பாறை என்ற தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு

 

பின்பு கடையின் உரிமையாளர் யோகேஸ்வரன், உங்களுக்கு முடி வெட்ட முடியாது, நீ வேறு எங்கேயாவது வெட்டிக்கொள் என்று திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் சஞ்சய் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் ஒன்றிணைந்து, முடி திருத்தம் கடைக்கு சென்று, என்ன காரணத்திற்காக முடி வெட்ட முடியாது என்று சொன்னீர்கள்? என்று கடை உரிமையாளர் யோகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர். அப்போது யோகேஷ்வரன் உங்களுக்கு(குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் இடத்தை கூறி) முடி வெட்ட முடியாது அவ்வளவுதான் என்று சொல்லி வேறு ஒருவருக்கு முடிவெட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்.

வாக்குவாதம்:

பின்பு யோகேஸ்வரன் தந்தை கருப்பன் (எ) சென்னையன், கடைக்கு வரும் பொழுது அவரிடம் இளைஞர்கள் காரணத்தை கேட்டிருக்கிறார்கள். அப்போது உங்களுக்கு இப்போது மட்டுமல்ல காலம் காலமாக முடி வெட்டுவதில்லை தெரிவித்துள்ளார். அப்போது இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அவர் இப்போதும் முடி வெட்ட முடியாது, எப்போதும் முடி வெட்ட முடியாது. நீங்க எங்கு சென்று புகார் செய்தாலும் அதை பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார்.  அப்போது இளைஞர்கள் கருப்பன் (எ) சென்னையனை பார்த்து சமூக நீதி பேசக்கூடிய திமுகவில் இருக்கின்ற நீங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா? இதை தான் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்களா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. 

தந்தை, மகன் கைது:

அதன் பிறகு நேற்று பாதிக்கப்பட்ட இளைஞர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அரூர் காவல் நிலையத்தில்
பாதிக்கப்பட்ட இளைஞர் சஞ்சய், அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து முடிதிருத்தும் கடை உரிமையாளர் யோகேஸ்வரன், மற்றும் இவரது தந்தை  கருப்பன் (எ) சென்னையன், ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்ததால், யோகேஸ்வரன் மற்றும் தந்தை கருப்பன் (எ) சென்னையன் இருவரையும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அரூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சம்பவம் அரூர் பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பட்டியல் சமூக பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொடுத்ததும், மாட்டிறைச்சியை பேருந்தில் எடுத்து வர கூடாது என சாதிய பாகுபாடுகள் காட்டிய சம்பவம் அரூர் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

DK Shivakumar: கர்நாடகாவில் 'டி.கே.எஸ்' சகாப்தம் ஆரம்பம்: புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு!
DK Shivakumar: கர்நாடகாவில் 'டி.கே.எஸ்' சகாப்தம் ஆரம்பம்: புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்பு!"
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை(04-06-26) மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க
Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை(04-06-26) மின் தடை! உங்கள் ஏரியா இருக்கா? செக் பண்ணுங்க

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Embed widget