மேலும் அறிய

5கிமீ தூரம்.. பச்சை போர்த்திய ஆறு! தேங்கிய ஆற்று நீர்! விவசாயிகளுக்கு சிக்கலாகும் ஆகாயத்தாமரை!

மொத்தம் 115 இடங்களில் இந்த தூர்வாரும் பணிகள் என்பது நடைபெற்றது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் 112 இடங்களில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெண்ணாற்றில் 5 கிலோமீட்டர் தூரம் வரை ஆகாயத்தாமரை இதுவரை தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதியில் உள்ள மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டம். இந்த மாவட்டத்தில் கடந்த  ஆண்டு பாசனத்திற்குரிய ஆறு, வாய்க்கால், வடிகால்களில் தூர்வாரும் பணி என்பது சம்பிரதாயத்திற்காக தொடங்கப்படும் நிகழ்வாக மட்டுமே அமைந்துள்ளது. அதிக மழை வெள்ளக்காலங்களில் தண்ணீர் சீராக பாய வழியின்றி ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டு வருவது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.


5கிமீ தூரம்.. பச்சை போர்த்திய ஆறு! தேங்கிய ஆற்று நீர்! விவசாயிகளுக்கு சிக்கலாகும் ஆகாயத்தாமரை!

இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக சிறப்பு நிதியாக 80 கோடி ரூபாயினை 4 ஆயிரத்து 964 கிலோமீட்டர் தூரத்திற்கு  வாய்க்கால்கள் மற்றும் சிறு குறு வாய்க்கால்களை தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்டது.குறிப்பாக நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் 1200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிக்காக சுமார் ரூ.12 கோடி 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

மொத்தம் 115 இடங்களில் இந்தத் தூர் வாரும் பணிகள் என்பது நடைபெற்றது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் 112 இடங்களில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் சிறு-குறு வாய்க்கால்கள் பிரதான ஆறுகள் தூர்வாரப்படாமல் உள்ளது. கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் வரை செல்லும் வெண்ணாற்றில் ஆகாயத்தாமரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை படர்ந்துள்ளது.


5கிமீ தூரம்.. பச்சை போர்த்திய ஆறு! தேங்கிய ஆற்று நீர்! விவசாயிகளுக்கு சிக்கலாகும் ஆகாயத்தாமரை!

இப்பகுதிக்கு தண்ணீர் வந்த நிலையில்  இதுவரை இந்த ஆறு தூர் வாராத காரணத்தினால் கடை மடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடபாதிமங்கலம் பண்டிதகுடி சேகரை சேரி உள்ளிட்ட இருபத்து ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதனால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் .அதேபோன்று திருவாரூர் நகர பகுதி வழியாக கடந்து செல்லும் ஓடம்போக்கி ஆகாயத்தாமரை என்பது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்து காணப்படுகிறது. இந்த ஆற்றையும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வார வேண்டும் என்று நீண்ட நாட்களாக திருவாரூர் நகர மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அரசு அதிகாாிகள் கவணம் செலுத்தி உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வாரவேண்டும் என சமூகஆர்வலர்களும்  விவசாயிகளும் அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர் .

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
சிவகங்கை சோழபுரத்தில் 195 ஆண்டு பழமையான ஜமீன்தார் கல்வெட்டு கண்டெடுப்பு!
சிவகங்கை சோழபுரத்தில் 195 ஆண்டு பழமையான ஜமீன்தார் கல்வெட்டு கண்டெடுப்பு!
நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..
நாவல் பழம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு: பாம்பு நஞ்சு கக்கியதாக பரவும் செய்தி உண்மையா? மருத்துவரின் அறிவியல் பூர்வ விளக்கம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; By By Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; By By Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
அடிச்சா டபுள் செஞ்சுரி... பந்துக்கு செம Injury .. சேப்பாக்கத்தில் இடி இடியாய் இடித்த இஷான் கிஷன்!
அடிச்சா டபுள் செஞ்சுரி... பந்துக்கு செம Injury .. சேப்பாக்கத்தில் இடி இடியாய் இடித்த இஷான் கிஷன்!
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
Embed widget