மேலும் அறிய

எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்

தருமபுரி அருகே பணி இடமாற்றம் பெற்று சென்ற தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி, பள்ளிக்கு செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வகுரப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியை, 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 17 மாணவர்களும், 18 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் 10 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக தமிழ்மணி பொறுப்பேற்றார். அவர் வந்தபோது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு ஆக இருந்த நிலையில், தலைமையாசிரியர் தமிழ்மணி வீடு வீடாக சென்று மாணவர்களின் பெற்றவர்களிடம் பேசி மாணவர்களை, இதே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து தலைமையாசிரியர் தமிழ்மணி மீது நம்பிக்கை கொண்ட பெற்றோர்கள் அரசு தொடக்கப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துள்ளனர். 


எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
இந்த நிலையில் ஆசிரியர் தனது தனிப்பட்ட ஆர்வத்தால் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, அதிக கவனம் செலுத்தி படிக்க வைப்பது, மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை, விளையாட்டு என பல்வேறு இடங்களுக்கு அழைத்து போட்டிகளில் கலந்து கொள்ள வைத்துள்ளார். இதனால் மாவட்ட அளவில் மாணவர்கள் முதலிடமும் பிடித்துள்ளனர். அதேபோல் படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்தி, ஆங்கிலம் நன்றாக படித்து வந்துள்ளார். தமிழ்மணி ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல், பள்ளியின் தரம் அதிகரித்து, மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பொது பணி மாறுதல் கலந்தாய்வில், தமிழ்மணி ஆசிரியர், செங்குட்டை அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றுள்ளார்.


 இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் பணி மாறுதல் பெற்றுள்ளதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது தலைமை ஆசிரியரை பிரிய மனம் இல்லாத மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதனை கண்ட தலைமை ஆசிரியரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். 
இந்நிலையில் இன்று காலை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மணியை மீண்டும், வகுரப்பம்பட்டி பள்ளிக்கு பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி, மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும், மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பாமல், பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர், காவல் துறையினர்  உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களுக்கு தமிழ்மணி ஆசிரியரை மீண்டும் பணியை அமர்த்த வேண்டும், அவர் வந்த பிறகுதான் இந்த பள்ளி நன்கு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அவரை நம்பியே மெட்ரிகுலேஷன் படித்த பிள்ளைகளை கூட அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம். அவரைப் போல் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். எனவே அவரை மீண்டும் இங்கு பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பேசினார். ஆனால் பணி மாறுதலில் அவர் பெற்றுள்ளதால் இப்போதைக்கு செய்ய முடியாது ஆனால் அவரை பணி மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர்கள், ஆசிரியரை திரும்பவும் பணியமர்த்தும் வரை, நாங்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் தமிழ்மணி ஆசிரியரே தங்கள் பள்ளிக்கு மீண்டும் வேண்டுமென மாணவ, மாணவிகளும் கண்ணீர் விட்டு அழுதனர். 

இதனை அறிந்த தலைமையாசிரியர் தமிழ்மணி நேரில் வந்து மாணவ,  மாணவிகளை சமரசம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுததால், மாணவர்களை கண்டு தலைமையாசிரியரும் கண் கலங்கினார்.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் இருவரிடமும் கடிதம் பெற்று, இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மீண்டும் தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வரவில்லை என்றால், பிள்ளைகளை வேறுபள்ளிக்கு சேர்த்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் தலைமை ஆசிரியர் பணி மாறுதலில் சென்றதால், பிரிய மனம் இல்லாமல் பெற்றோர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கண் கலங்கி அழுததும், தன் மீது அளப்பரிய அன்பு வைத்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அன்பை நினைத்து தலைமையாசிரியர் அழுததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (04-06-2026) மின்தடை ஏற்படும் ஏரியாக்கள் - இதோ முழு லிஸ்ட்
தருமபுரியில் நாளை (04-06-2026) மின்தடை ஏற்படும் ஏரியாக்கள் - இதோ முழு லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை ( 30-05-2026) மின் தடை! எங்கெல்லாம் இருக்காது?
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை ( 30-05-2026) மின் தடை! எங்கெல்லாம் இருக்காது?
இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருதி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருதி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
Embed widget