மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்

கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வரும் நிலையில், பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லத்தினை சேர்க்க, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லம் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் வெள்ளம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெல்லத்தை தொகுப்பில் சேர்த்து வழங்க, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உருண்டை வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை, தசரா, தீபாவளி, பொங்கல் பண்டிக்கை காலங்களில் உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரித்து, விலை உயர்ந்து விற்பனையாகும்.

பொங்கல் தொகுப்பில் இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்
 
தற்போது பண்டிகைக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ளதால் வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. தற்போது உருண்டை வெல்லம் கிலோ ரூபாய் 45 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிற்பம் ரூபாய் 1350-க்கு விற்கப்படுகிறது.
 
பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டை விட முன் பதிவு குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெல்லம் விலை கிலோ 50 வரை விற்பனையானால், மட்டுமே வருவாய் கிடைக்கும். பொங்கல் தொகுப்பிற்காக உருண்டை வெல்லம் கொள்முதல் செய்தால், தங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லம் சேர்த்து வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உருண்டை வெல்லத்தை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது. இதனால் தரம் இல்லாத வெல்லம் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் பெரும் புகார் எழுந்தது. அதேபோல் அரசுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் பொழுது, விலை அதிகம் மற்றும் போக்குவரத்து கட்டணம் என விலை அதிகமாக இருந்து வந்தது. 

பொங்கல் தொகுப்பில் இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்
 
தற்பொழுது உருண்டை வெல்ல உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகிற நிலையில், இந்தாண்டு உருண்டை வெல்ல உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் உருண்டை வெல்லத்தை, அந்த மாவட்டங்களிலே கொள்முதல் செய்ய வார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் பொங்கல் தொகுப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு மட்டுமே அறிவித்தது. இதில் உருண்டை வெல்லம் இடம்பெறவில்லை. இதனால் உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பொங்கல் தொகுப்பிலே உருண்டை வெல்லம் இடம்பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வரும் நிலையில், பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லத்தினை சேர்க்க, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் வெல்லத்தினை வழங்கவும், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
"மாதம் தோறும் உதவித்தொகை வேண்டுமா? விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!"
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
Embed widget