மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்

கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வரும் நிலையில், பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லத்தினை சேர்க்க, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லம் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் வெள்ளம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெல்லத்தை தொகுப்பில் சேர்த்து வழங்க, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உருண்டை வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை, தசரா, தீபாவளி, பொங்கல் பண்டிக்கை காலங்களில் உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரித்து, விலை உயர்ந்து விற்பனையாகும்.

பொங்கல் தொகுப்பில் இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்
 
தற்போது பண்டிகைக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ளதால் வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. தற்போது உருண்டை வெல்லம் கிலோ ரூபாய் 45 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிற்பம் ரூபாய் 1350-க்கு விற்கப்படுகிறது.
 
பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டை விட முன் பதிவு குறைவாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெல்லம் விலை கிலோ 50 வரை விற்பனையானால், மட்டுமே வருவாய் கிடைக்கும். பொங்கல் தொகுப்பிற்காக உருண்டை வெல்லம் கொள்முதல் செய்தால், தங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லம் சேர்த்து வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உருண்டை வெல்லத்தை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது. இதனால் தரம் இல்லாத வெல்லம் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் பெரும் புகார் எழுந்தது. அதேபோல் அரசுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் பொழுது, விலை அதிகம் மற்றும் போக்குவரத்து கட்டணம் என விலை அதிகமாக இருந்து வந்தது. 

பொங்கல் தொகுப்பில் இடம்பெறாத உருண்டை வெல்லம்; மிகுந்த ஏமாற்றத்தில் உற்பத்தியாளர்கள்
 
தற்பொழுது உருண்டை வெல்ல உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வருகிற நிலையில், இந்தாண்டு உருண்டை வெல்ல உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் உருண்டை வெல்லத்தை, அந்த மாவட்டங்களிலே கொள்முதல் செய்ய வார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் பொங்கல் தொகுப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு மட்டுமே அறிவித்தது. இதில் உருண்டை வெல்லம் இடம்பெறவில்லை. இதனால் உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பொங்கல் தொகுப்பிலே உருண்டை வெல்லம் இடம்பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் உற்பத்தியாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வரும் நிலையில், பொங்கல் தொகுப்பில் உருண்டை வெல்லத்தினை சேர்க்க, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் வெல்லத்தினை வழங்கவும், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget