மேலும் அறிய

"ஓடிய வேகத்தை பார்த்து வீட்டில் முடங்கிய கிராமம்" சிறுத்தையா இல்லை காட்டுப்பூனையா..?

கிராமத்திற்குள் நுழைந்த புதிய வகையான விலங்கு-சிறுத்தை தோற்றத்திலிருந்து இருந்ததால் சிறுத்தை உலா வருவதாக பீதியில் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்-சி சி டிவியால் காட்டு பூனை என்பது உறுதியானது.

தர்மபுரி அருகே புள்ள கிராமங்களில் புதிய வகை விலங்கு ஒன்று சுற்றி வந்ததால், சிறுத்தை என கருதி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நேரில் சோதனை நடத்திய வனத்துறையினர் அங்கிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் பொதுமக்களை அச்சுறுத்தியது என்னவென்று கண்டுபிடித்தனர்.

வனத்துறை சோதனையில் சிக்கியது என்ன ?

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே குறிஞ்சிப்பட்டி பகுதியில் உள்ள கொய்யா தோட்டத்திற்குள் இருந்து நேற்று முன்தினம் வினோத சத்தம் வந்துள்ளது. அதனை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, ஆட்கள் வருவதை அறிந்த அந்த விலங்கு அந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. ஆனால் வேகமாக பாய்ந்து ஓடிய விலங்கு சிறுத்தை தோற்றத்தில் இருந்ததால், சிறுத்தை தான் ஊருக்குள் வந்தது என கிராம மக்கள் அச்சமடைந்தனர். மேலும் சிறுத்தை ஊருக்குள் நுழைந்ததாக தகவல், கிராமப் புறங்களில் வேகமாக பரவியது. இதனால் அச்சமடைந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் கிராமப் புறத்திற்குள் சிறுத்தை நுழைந்ததாக தர்மபுரி வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பகுதியில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது விலை நிலங்களில் கால் தடம் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கால் தடங்களை ஆய்வு செய்த வனத்துறை

இதனை எடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை வனத் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் விவசாய தோட்டத்தில் பதிவான சிசிடிவி காட்சியில் ஒரு விலங்கு ஓடுவது போல் பதிவாகியுள்ளது. அந்த விலங்கு சிறுத்தையா? அல்லது வேறு ஏதேனும் விலங்கா என கிடைத்த கால் தடத்தினை வனத் துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வனத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த நிலத்தை சுற்றி பொறுத்து இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வனத் துறையினர் பார்த்தனர். சிசிடிவி பதிவாகி இருந்த காட்சியை பார்த்த போது  அது மிகப் பெரிய அளவில் உள்ள காட்டு பூனை என்பது தெரியவந்தது.  

காட்டுப்பூனைதான் சிறுத்தை அல்ல

இதனைத் தொடர்ந்து உருவத்தில் பெரிய அளவிலான காட்டு பூனை ஒன்று அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. அதனை பார்த்தவர்கள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புரளியை கிளப்பிவிட்டனர். காட்டு பூனையின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் தங்களது அன்றாட பணிகளுக்காக வெளியே வரலாம் என்றும் தேவையில்லாத அச்சம் வேண்டாம் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கிராம பகுதியை விட்டு சென்றனர். மேலும் தர்மபுரி பகுதியில் காட்டுப் பூனையை பார்த்த சிலர் புதுமையான விலங்காக தெரிந்ததால் சிறுத்தை என்று,  குழப்பத்தில் அச்சமடைந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget