மேலும் அறிய

ஏடிஎம் கொள்ளையில் கிடைத்த துணுக்கு; வடமாநில கும்பலை ரவுண்டு கட்டிய ஸ்பெஷல் டீம்

10 தனிப்படை அமைத்து விசாரணை முடிக்கி விடப்பட்டுள்ளதாக சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் இரவு வரை அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பண பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்து ரூ.14.50 லட்சம் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதே போல் கடந்த 5ஆம் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோவில் ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நடத்தினர். இதற்கிடையே, ஞாயிறு அன்று கர்நாடக மாநிலம் வெள்ளந்தூர் மற்றும் ஆசான் மாவட்டங்களில் இரண்டு ஏடிஎம் மையங்களில் இயந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து அதிலிருந்து ரூ.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை நடந்த ஏடிஎம் இயந்திரங்களில் பதிவான கைரேகைகளை வைத்து மூன்று மாநில போலீசார்  நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் வடமாநிலங்களான அரியானா, குல்பர்கா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே ஓசூரில் ஏடிஎம் கொள்ளை நடந்த இடத்தில் திங்கட்கிழமை சேலம் சரக டிஐஜி உமா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஓசூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையில் நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை தொடர்பாக முழு தகவலை நாளை 9ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு எஸ்பி தெரிவிக்க உள்ளார்.

குருபரப்பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது அரியானா மாநிலம் மே வாத் பகுதியைச் சேர்ந்த கும்பல் என்பதும் பிக்கப் வாகனத்தில் வந்து கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

 இது தொடர்பாக ஒரு சில குற்றவாளிகள் கைதான போதிலும் முக்கிய குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்படவில்லை. தற்போது ஓசூர், ஆந்திரா, கர்நாடகாவில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.59.50 லட்சம் கொள்ளை அடித்த கும்பல் குருபரப்பள்ளியில் கைவரிசை காட்டிய கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது இவ்வாறு சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்தார் 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Embed widget