மேலும் அறிய

Dharmapuri: இடிந்த நிலையில் வீடுகள்.. அச்சத்துடன் வாழும் அரூர் இருளர் இன மக்கள்.. அரசு உதவ கோரிக்கை!

அரூர் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் பழுதாகி விரிசல் ஏற்பட்ட நிலையில், தினமும் அச்சத்துடன் வசித்து வரும் இருளர் இன மக்கள் புதிய வீடுகள் கட்டித் தர வலியுறுத்தியுள்ளனர்.

அரூர் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் பழுதாகி, மேற்கூரை பெயர்ந்தும், விரிசல் ஏற்பட்ட நிலையில், தினமும் அச்சத்துடன் வசித்து வரும் இருளர் இன மக்கள் புதிய வீடுகள் கட்டித் தர வலியுறுத்தியுள்ளனர்.


Dharmapuri: இடிந்த நிலையில் வீடுகள்.. அச்சத்துடன் வாழும் அரூர் இருளர் இன மக்கள்.. அரசு உதவ கோரிக்கை!

இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள்

தருமபுரி மாவட்டம் அரூர்  வட்டம் வேடகட்டமடுவு ஊராட்சியில் வேடகட்டமடுவு, டி.ஆண்டியூர், டி.அம்மாபேட்டை, மொண்டுகுழி, முல்லைவனம், கீழ்செங்கப்பாடி, நண்டுபள்ளம், தரகம்பட்டி, தாம்பல், ஆலம்பாடி, கருங்கல்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப் பெரிய ஊராட்சி இந்த வேடகட்டமடுவு ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களில் பலதரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் ஆண்டியூர் கிராமத்தில் அருந்ததியர் மற்றும் இருளர் இன மக்கள் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் இருளர் இன மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளிலே இன்றுவரை இருந்து வருகின்றனர். பழங்காலத்து வீடு என்பதால், மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கம்பி மட்டும் தெரிந்தவாறு எலும்புக் கூடு போல காட்சியளித்து வருகிறது. அதேப்போல் மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து வருவதால், வீடுகளில் இரவு நேரங்களில் உறங்க முடியாமல் தவித்து வரீகின்றனர். மழை வரும் காலங்களில் மழைநீரை பாத்திரங்கள் வைத்து பிடித்து வருகின்றனர். மேலும் எப்போழுது வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் அச்சத்துடனே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குடும்பமாக இருந்த நிலையில், தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால்  பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வரும் குடியிருப்புகளிலேயே அந்த கிராம மக்கள் 2, 3, குடும்பங்கள் சிறு பிள்ளைகளை வைத்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் வெளியூர் வேலைக்கு சென்று கிடைக்கும் வருவமானத்தை வைத்து, மேற்கூரைக்கு சிமெண்ட் கலவை போட்டிள்ளனர். ஆனால் மழை கசிவது நிற்கவில்லை. மேலும் வீடுகளை பழுது பார்க்கவோ, புதிதாக கட்ட வசதியில்லாமல் இருந்து வருவதாக இருளர் இன மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பகுதிக்கு தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் கட்சிகள், தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கிறோம் என கூறி, வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.  எங்கள் இருளர் காலனியை திரும்பி கூட பார்ப்பதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.  இந்த பிரச்சினைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர், பிடிஓ, மாவட்ட ஆட்சியர் என அனைத்து அரசு அதிகாரிகளிடமும் புகார் அளித்ததில், சிலருக்கு மட்டுமே வீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில குடும்பத்தினர், பழுதடைந்த வீட்டிலே வசித்து வருகின்றனர். அரசு சார்பில்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.  எனவே இருளர் இன காலனியில் பழுதாகியுள்ள வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும், வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் கேட்டபோது, 


டி.ஆண்டியூர் இருளர் காலனியில் உள்ள வீடுகள் பழுதாக இருப்பதை, வருவாய் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, பாதிபாபுகளை கணக்கெடுத்து, புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget