மேலும் அறிய

காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் - ஜி.கே.மணி

ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விரைவில் பாமக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தருமபுரியில் பேட்டி.

 

ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விரைவில் பாமக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.

பாமகவின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் ஆலோசனை கூட்டம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, “காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், காவிரி ஆற்றில் கடந்த 15 நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூரில்  இருந்து, டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் தமிழகத்தில் காவிரி நதிநீர் பாயும் இடம் தருமபுரி மாவட்டம், வறட்சியாக இருந்து வருகிறது. 

அதனை போக்கும் வகையில் காவிரி  உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாமக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.  

காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ராமதாஸ் மாபெரும் கையெழுத்து இயக்கம்

ஒகேனக்கல் காவிரி ஆறு உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அனைத்து கட்சியினர் இணைந்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி சுமார் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட நபர்களிடம் கையெழுத்து பெற்று, அப்போதைய முதலமைச்சரிடம் கொடுத்தோம்‌‌.  திட்டத்தை நிறைவேற்றி தருவதாக சொன்னார். தற்போதைய முதல்வரிடமும் வலியுறுத்தினோம். 

காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் - ஜி.கே.மணி

வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்

ஒகேனக்கல் காவிரியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் சுமார் 60 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. இதில் இரண்டரை டிஎம்சி தண்ணீரை மட்டும் தருமபுரி மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். மத்திய அரசு காவிரி நீர் பிரச்சனைகள் குறித்து உடனடி கவனம் செலுத்தி, ஒரு வலுவான காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும்.  ராசி மணல் அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

மேலும் ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதியில் கடந்த 1961 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் ஆய்வு செய்து அடிக்கல் நாட்டப்பட்ட ராசி மணல் அணைக்கட்டு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 75 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க இயலும். 

இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் வரை பயன்படுத்தலாம். இதனால் மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரம் கிடைக்கும். ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டம், மற்றும் ராசி மணல் அணைக்கட்டு திட்டம் ஆகியவற்றின் மூலம் சுமார் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.  இந்த திட்டச்களை நிறைவேற்ற வலியுறுத்தி, சட்ட மன்றத்தில் பேசப் போகிறோம்” என்றார்.

இந்த கூட்டத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ இல.வேலுச்சாமி உள்ளிட்ட பாமக தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (20-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget