மேலும் அறிய

தர்மபுரிக்கு ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் - ஓகே சொன்ன நகராட்சி கவுன்சிலர்கள்

தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சியில் 68,595 பேர் வசித்து வருகின்றனர்.

தர்மபுரி நகராட்சி 11.65 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த நகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளது‌.  1980 ஆம் ஆண்டு 4 ஏக்கர் பரப்பளவில் 52 பஸ்கள் நிறுத்தும் வகையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் டவுன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. 

இந்த பஸ் நிலையங்களுக்கு தினசரி 120 தனியார்  பஸ்களும், 420 அரசு பஸ்சுகளும் வந்து செல்கின்றன. இதில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள தருமபுரி பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு 83 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி பஸ் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரயில் நிலையம்,  20 தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகள் உள்ளது. 

இந்நிலையில் இலக்கியம்பட்டி, அதியமான்கோட்டை, தடங்கும், சோகத்தூர், பழைய தருமபுரி, செட்டிக்கரை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கும், வாழ்வாதாரத்திற்கும் நகராட்சி பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில் தர்மபுரி நகரில் உள்ள புறநகர் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய பஸ் நிலையத்தை சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைப்பதற்கு திட்ட வரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தருமபுரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி மற்றும் அரசுக்கு சொந்தமான நிலம் இல்லை என்பதால், தனியாரிடமிருந்து தானமாக நிலம் பெற நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. 

இது தொடர்ந்து பஸ் நிலையம் அமைக்க சோகத்தூர் ஊராட்சி ஏ.ரெட்டிஹள்ளி கிராமம் அருகே 10 ஏக்கர் நிலம் தனியாரிடமிருந்து  தானமாக பெறப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை, தர்மபுரியில் 39.14 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்ட அனுமதி அளித்து அரசாணையை வெளியிட்டது. 

ஆனால் சில காரணங்களால் பஸ் நிலையம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்தப்பு புள்ளி கோரப்பட்டு, இந்த திட்டத்தை பொதுப்பணித்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தர்மபுரி நகராட்சியின் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. 

இந்த நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் புவனேஸ்வரன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறித்து விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்தில் தர்மபுரி நகரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் குறித்து நகரமன்ற தலைவர் மற்றும் கமிஷனர் ஆகியோர் பேசினர். 

இந்த தீர்மானத்தை நகராட்சி 33 கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றினர். தர்மபுரி நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் நலன் கருதியும், பென்னாகரம் மெயின் ரோட்டில் தனியார் பங்களிப்புடன் 40 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இப்பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த பள்ளிகள் கோரப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தை கட்டி அதனை பராமரித்து, நகராட்சிக்கு ஆண்டுதோறும் 55.40 லட்சம் கட்டணமாக செலுத்த முன்வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue
வெடிக்கும் போதைப்பொருள் வழக்கு சிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் கலகத்தில் சினிமா வட்டாரம் Krishna Arrested
போர்க்கொடி தூக்கும் MLA-க்கள்!கலக்கத்தில் சித்தராமையா!அடித்து ஆடும் டி.கே.சிவக்குமார் | DK Shivakumar VS Sitharamaiah
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின் | MK Stalin on Duraimurugan | Udhayanidhi stalin | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
முதல்வரைத் துரத்தும் தவெக ரசிகர்கள்; இன்றைய நிகழ்வில் விஜய் படம் காட்டிய மாணவர்!
முதல்வரைத் துரத்தும் தவெக ரசிகர்கள்; இன்றைய நிகழ்வில் விஜய் படம் காட்டிய மாணவர்!
SJ Suriya into Direction: நடிப்பு ராட்சசன் இயக்கும் ‘கில்லர்‘; மீண்டும் இயக்குநர் அவதாரத்தில் எஸ்.ஜே. சூர்யா - ஹீரோ யார் தெரியுமா.?
நடிப்பு ராட்சசன் இயக்கும் ‘கில்லர்‘; மீண்டும் இயக்குநர் அவதாரத்தில் எஸ்.ஜே. சூர்யா - ஹீரோ யார் தெரியுமா.?
TNEA Rank List: பொறியியல் தரவரிசை; 145 பேர் 200-க்கு 200; டாப்பில் காஞ்சிபுரம் சஹஸ்ரா, நாமக்கல் கார்த்திகா- அரசுப் பள்ளிகளில் யார்?
TNEA Rank List: பொறியியல் தரவரிசை; 145 பேர் 200-க்கு 200; டாப்பில் காஞ்சிபுரம் சஹஸ்ரா, நாமக்கல் கார்த்திகா- அரசுப் பள்ளிகளில் யார்?
Mahindra: சுதந்திர தினத்திலிருந்து வேற லெவல்; புதிய தளத்தில் வாகனத்தை களமிறக்கும் மஹிந்திரா - அறிவிப்பு டீசர் வெளியீடு
சுதந்திர தினத்திலிருந்து வேற லெவல்; புதிய தளத்தில் வாகனத்தை களமிறக்கும் மஹிந்திரா - அறிவிப்பு டீசர் வெளியீடு
Embed widget