மேலும் அறிய

அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை; போராட்டத்தில் குதித்த மக்கள்

கம்பைநல்லூர் அருகே அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை கைது செய்து, நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் எங்கும் அரசு மதுபான கடையில் இல்ல. இதனால் இந்த பகுதியில் உள்ள மது பிரியர்கள் கம்பைநல்லூர் சென்று மது வாங்கி அருந்துகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு அதே கிராமத்தைச் சார்ந்த சபரி என்கின்ற இளைஞர் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை கொள்முதல் செய்து, பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த கிராமத்தில் மது பிரியர்களுக்கும் மட்டுமல்லாமல், சிறுவர்களும் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனை அடுத்து கிராம மக்கள் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.


அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை; போராட்டத்தில் குதித்த மக்கள்

 

ஆனால் காவல் துறையினர் சபரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் கள்ள சந்தையில் மது விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்த சம்பவம் சபரிக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சபரி சமூக வலை தளத்தில், எவனும் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஊரே திரண்டு வந்தாலும் எதுவும் பண்ண முடியாது என, அநாகரிகமான முறையில் கிராம மக்களை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ஆத்திரமடைந்த கிராம மக்கள் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கி விற்பனை செய்கின்ற, சபரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது சபரி சில இளைஞர்களுக்கு மது பாட்டில்களை கொடுத்து புகார் கொடுக்க சென்றவர்களை மிரட்ட, அடியாட்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த இளைஞர்கள் கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு, சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காரிமங்கலம் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சபரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் சாலை மறியலில் கைவிட்டனர். இதனால் அரூர் காரிமங்கலம் பிரதான சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget