மேலும் அறிய

5 கி.மீ நடந்தே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்; தீர்த்தமலை அருகே பஸ் வசதி கோரும் மாணவர்கள் - அரசு செவி சாய்க்குமா?

5 கி.மீ நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தீர்த்தமலை அருகே தரைப்பாலம், பஸ் வசதி வேண்டும் பள்ளி மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாபநாவலசு, கூடலூர், கோபால்பட்டி வேட்டைக்காரன் கொட்டாய், இந்திரா நகர், ஏரி கொடி ஆகிய கிராமப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

இப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் 8 ஆம் வகுப்பிற்கு மேல் உயர் கல்வி பயில பாபநாவலசு -பாளையம் இடையே உள்ள  ஆற்றைக் கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் பாளையம் கிராமம் வரை நடந்து சென்றடைந்து,  அங்கிருந்து பஸ் மூலம்  தீர்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று படித்து மீண்டும் அதேபோன்று வீடு திரும்ப வேண்டும்.

பாபநாவலசு- பாளையம் கிராமம் இடையே உள்ள ஆற்றில் மழைக்காலங்களில்  தண்ணீர் பாய்ந்து ஓடும் பொழுது  மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதேபோன்று இந்த கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களை விற்பனைக்கு தலையில் சுமந்தும், பைக் மூலமும் தீர்த்தமலைக்கு கொண்டு செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டி கிராம மக்களும், அரசியல் கட்சிகளும் பல்வேறு  போராட்டங்கள் நடத்தியும்  எந்த பலனும் இல்லை.

5 கி.மீ நடந்தே பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்;  தீர்த்தமலை அருகே பஸ் வசதி கோரும் மாணவர்கள் - அரசு செவி சாய்க்குமா?

(அரூர் அருகே பாபநாவலசு - பாளையம் கிராமம் இடையே தற்பொழுது தண்ணீர் இல்லாத ஆற்றை கடந்து நடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள்)

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், தற்பொழுது ஆற்றில் தண்ணீர் இல்லை. நாங்கள்  இந்த ஆற்றை கடந்து பாளையம் கிராமம் வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ் மூலம் தீர்த்தமலைக்கு சென்று உயர் கல்வி பயின்று வருகிறோம். பஸ் இல்லாத போது 5 கிலோமீட்டர் நடந்தே தீர்த்தமலை  செல்வோம்.

மழைக்காலங்களில் ஆற்றில் அதிக தண்ணீர் ஓடும் பொழுது பெண்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தரைப்பாலம் அமைத்து காலை, மாலை பள்ளி சென்று வர பஸ்  இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

ஆபத்தை உணராமல் ஆத்தங்கரையை தாண்டி செல்லும் மாணவர்கள்

கிராம மக்கள் கூறுகையில், எங்கள் வீட்டு பிள்ளைகள் உயர்கல்வி பயில மழைக்காலங்களில் ஆபத்தை உணராமல் இந்த ஆற்றைக் கடந்து  சென்று வருகின்றனர்.

அதேபோன்று எங்கள் விவசாய நிலங்களில் விளையும் விவசாய பொருட்களை விற்பனைக்கு தீர்த்தமலைக்கு கொண்டு செல்ல பொருட்களை தலை மீது சுமந்தவாறு ஆற்று தண்ணீரில் நடந்து செல்வதும், பைக்கின் மூலம் பொருட்களைக் கொண்டு செல்லவும் சிரமமாக உள்ளது. இது தொடர்பாக எம்எல்ஏ விடம் மனு கொடுத்துள்ளோம் என  தெரிவித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாரை அணுகிய போது

இதுகுறித்து அதிமுக அரூர் எம்எல்ஏ சம்பத்குமாரிடம் கேட்டபோது, அப்பகுதி  கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பஸ் இயக்க போக்குவரத்து இயக்குனரிடம் மனு கொடுத்துள்ளேன். ஆற்றின் குறுக்கே  நபார்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கி தரைப்பாலம் கட்டிக் கொடுக்க  மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கோரிக்கை வைத்து பேசினேன். மனுவும் கொடுத்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறேன்  என  தெரிவித்தார்.



.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு
மிரட்டி சாதித்த நிதிஷ்! பாஜக ப்ளான் FLOP! அடுத்த முதல்வர் யார்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
மதுரைக்கும், கோவைக்கும்
மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO"... பாஜகவின் பழிவாங்கும் சதியை முறியடிப்போம்- சீறும் மு.க.ஸ்டாலின்
TN Metro Rail: கோவை, மதுரைக்கு எதுக்கு மெட்ரோ ரயில்? திட்டத்தை குப்பையில போடுங்க, பஸ்ஸே போதும் - மத்திய அரசு
TN Metro Rail: கோவை, மதுரைக்கு எதுக்கு மெட்ரோ ரயில்? திட்டத்தை குப்பையில போடுங்க, பஸ்ஸே போதும் - மத்திய அரசு
Trump: ”வாயை மூடு, பன்னி” செய்தியாளர் மீது கோபம்.. சவுதி இளவரசருக்காக பொங்கி எழுந்த ட்ரம்ப் - நடந்தது என்ன?
Trump: ”வாயை மூடு, பன்னி” செய்தியாளர் மீது கோபம்.. சவுதி இளவரசருக்காக பொங்கி எழுந்த ட்ரம்ப் - நடந்தது என்ன?
Tamilnadu Round Up: குரூப் 2 பணியிடங்கள் உயர்வு, மோடி வருகை, ஸ்டாலின் கண்டனம், மெட்ரோ ரயில் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: குரூப் 2 பணியிடங்கள் உயர்வு, மோடி வருகை, ஸ்டாலின் கண்டனம், மெட்ரோ ரயில் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget