மேலும் அறிய

மழையால் காவிரியில் நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரிப்பு- ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிப்பு.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ற்றுலா பயணிகள், சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால், கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அணைகள் முழுவதுமாக நிரம்பாததால், தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் குறைவாகவே திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் முற்றிலுமாக தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்படுகின்ற தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வந்ததால், கடந்த நான்கு மாதங்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து, வினாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து முற்றிலுமாக இல்லாமல், காவிரி ஆறு வறண்ட பாறைகளாக காட்சியளித்து வந்தது. மேலும் ஒகேனக்கல் ஐந்தருவிகளில் தண்ணீர் இல்லாமல் இருந்தது.


மழையால் காவிரியில் நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரிப்பு- ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கர்நாடக மாநில குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்பொழுது திடீரென வினாடிக்கு எட்டாயிரம் கன அடி வரை நீர்வரத்து உயர்ந்தது. ஆனால் குடிநீர் தேவை முடிந்த பின் காவிரியில் நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாகவே காட்சி அளித்து வந்தது. இதனால் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலுமாகவே குறைந்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள, சுற்றுலா  தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பொழிய தொடங்கியது. மேலும் இந்த கோடை மழை மூன்று நாட்கள் ஒகேனக்கல் பகுதிகளில் அதிகமாக பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் கடந்த நான்கு மாதமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி அதிகரித்து வினாடிக்கு 500 கன அடியாக உயர்ந்தது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி போன்ற பகுதிகளில் கனமழை பெய்ததால், இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget