மேலும் அறிய

இதல்லவா விடியல் ! தர்மபுரியில் ரயில் பாதையில் நவீன மேம்பாலம்! ஆச்சர்ய தொழில்நுட்பம்!

தர்மபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை, ஓசூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடப்பதால் அதன் மீது நவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம்.

தர்மபுரி: தர்மபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை, ஓசூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடப்பதால் அதன் மீது நவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் மேம்பாலம்

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் இருந்து, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம், பெங்களூரு வரை, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. சேலம், கோவை, ஈரோடு மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், கிருஷ்ணகிரி செல்லாமல், தர்மபுரியிலிருந்து ஓசூர் வழியாக, கர்நாடகா மாநிலம் செல்ல, இச்சாலை உதவியாக இருக்கும். இதனால் 20 கிலோமீட்டர் துாரம் வரை குறையும்.

மேலும், ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். தர்மபுரி அதியமான் கோட்டையில் இருந்து, அம்மாவட்ட எல்லையான ஜிட்டாண்ட ஹள்ளி வரை, நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான காடுசெட்டிப்பட்டியிலிருந்து, ஓசூர் வரை ஆங்காங்கே சாலை பணிகள் நடக்கும் நிலையில், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, சானமாவு வனப்பகுதியில், மந்தகதியில் நடக்கின்றன. கர்நாடகாவில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் அருகே, தொரப்பள்ளி அக்ரஹாரம் வரை, 23 கி.மீ., துாரத்திற்கு சாலை பணிகள் நடக்கின்றது.

இரும்பு கூண்டு போன்ற அமைப்பு அமைக்கப்பட உள்ளது

ஓசூர் அடுத்த குருபட்டி அருகே, தர்மபுரி - நெரலுார் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே தண்டவாளத்தை கடக்க வேண்டியுள்ளது. அதனால், அதன் மேல் பகுதியில் வாகனங்கள் செல்ல, மேம்பாலம் அமைக்க வேண்டியுள்ளது. வழக்கமாக, பில்லர் போட்டு கான்கிரீட் அமைத்து தான் பாலம் அமைக்கப்படும். ஆனால், ரயில்வே தண்டவாளம் செல்வதால், கூடுதல் பில்லர் அமைக்க வாய்ப்பில்லை. அதனால், ரயில்வே தண்டவாளத்தின் இருபுறம் மட்டும், பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது இரும்பு கூண்டு போன்ற அமைப்பு அமைக்கப்பட உள்ளது.

அதற்காக தயாரிக்கப்பட்ட, இரும்பு கூண்டு தருவிக்கப்பட்டுள்ளது. அதை ரயில்வே தண்டவாளத்தின் மேல், இருபுறமும் உள்ள பில்லர்களுடன் இணையும் வகையில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பணி முடிந்தவுடன், இரும்பு கூண்டு பகுதியில், கான்கிரீட் போட்டு, அதன் மீது சாலை அமைக்கப்பட உள்ளது.

அதற்கான பணியில், ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற பாலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் தெரிவிக்கையில்., போதுமான இடவசதி இல்லாத இடங்களில், ரயில்வே தண்டவாளங்களுக்கு மேல், இதுபோன்ற நவீன தொழில்நுட்படத்துடன் பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget