மேலும் அறிய

நல்லா இருந்த ரோட்ட ஒடச்சி வச்ச டவுன் பஞ்சாயத்து - நடக்க முடியலைனு மக்கள் கண்ணீர்

அரூர் டவுன் பஞ்சாயத்து அம்பேத்கர் நகரில் பழுதான கான்கிரீட் சாலை, கழிவுநீர் கால்வாய்  இல்லாமல் தவிக்கும் மக்கள். வீட்டருகே தேங்கும் கழிவுகளில் நோய் தொற்று பரவ வாய்ப்பு.

தருமபுரி மாவட்டம் அரூர் டவுன் பஞ்சாயத்தில் 18 வார்டுகள் உள்ளது. இதில் அம்பேத்கர் நகரில் 3 வார்டுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஜெயபால் நகர் பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டும், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் குடிநீர் குழாய் அமைப்பதற்காக, சிமெண்ட் சாலை வெட்டி எடுக்கப்பட்டு குடிநீர் குழாய்களை அமைத்துள்ளனர். இதனால் அந்த கான்கிரீட் சாலை சேதமடைந்துள்ளது. இதனை டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் பராமரிக்காததால், சாலை ஆங்காங்கே பழுதாகி குண்டு, குழியுமாக மாறியது.

இந்த வழியில் அவசர தேவைக்கு ஆட்டோ உள்ளிட்ட வண்டிகள் வர முடிவதில்லை. இந்த வழியில் நடந்து செல்ல கூட முடியாமல், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்லும் முதியவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

நல்லா இருந்த ரோட்ட ஒடச்சி வச்ச டவுன் பஞ்சாயத்து - நடக்க முடியலைனு மக்கள் கண்ணீர்

அதேபோல் இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால், கழிவு நீர், கால்வாயில் வெளியேற வழியில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவு நீர், ஆற்றுக்கு செல்ல வழி இல்லாமல், ஆங்காங்கே தேங்கி நின்று, துர்நாற்றம் வீசியும், கொசு உற்பத்தி ஆகிறது. 

இதனால் குழந்தைகள் அதிகமாக இருப்பதால் கொசுவால், நோய் தொற்று பரவும் அபாயமும் இருந்து வருகிறது. மேலும் அம்பேத்கர் நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து, சேதமடைந்துள்ள கான்கிரீட் சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும் என அம்பேத்கர் நகர் மக்கள் அரூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மேலும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வதற்கு, துப்பரவு பணியாளர்கள் வருவது இல்லை. எனவே அரூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடக்கின்ற சாலையை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து, வீடுகளில் இருந்து வெளியேறுகின்ற கழிவு நீர் ஆற்றுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயபால் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் கேட்டபோது, “அரூர் அம்பேத்கார் நகரில் பழுதடைந்துள்ள சாலைகளை சரிசெய்யவும், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க, அதிகாரிகளை அனுப்பி விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin USA: வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!
CM Stalin USA: வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!
Accident: காலையிலே சோகம்! பேருந்தில் மோதி நொறுங்கிய கார் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மரணம்
Accident: காலையிலே சோகம்! பேருந்தில் மோதி நொறுங்கிய கார் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மரணம்
Breaking News LIVE: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைப்பு
Breaking News LIVE: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைப்பு
TVK First Party Conference : தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்... 
தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்... 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manaadu | மாநாடு-க்கு திணறும் விஜய்..போலீஸ் கேட்ட 21 கேள்விகள்..அனுமதி இல்லையா?Mahavishnu Arrested | AIRPORT வந்த மகாவிஷ்ணு..தட்டி தூக்கிய போலீஸ்..நிலவரம் என்ன?Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin USA: வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!
CM Stalin USA: வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!
Accident: காலையிலே சோகம்! பேருந்தில் மோதி நொறுங்கிய கார் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மரணம்
Accident: காலையிலே சோகம்! பேருந்தில் மோதி நொறுங்கிய கார் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மரணம்
Breaking News LIVE: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைப்பு
Breaking News LIVE: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைப்பு
TVK First Party Conference : தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்... 
தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்... 
Indian Railways: கவலைய விடுங்க..! இனி மணிக்கு 250 கிமீ வேகம், தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் - ரயில்வே அப்டேட்கள்
Indian Railways: கவலைய விடுங்க..! இனி மணிக்கு 250 கிமீ வேகம், தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் - ரயில்வே அப்டேட்கள்
FDI For States: வெளிநாட்டு முதலீட்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது எவ்வளவு? இந்தியாவில் முதலிடம் யாருக்கு?
வெளிநாட்டு முதலீட்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது எவ்வளவு? இந்தியாவில் முதலிடம் யாருக்கு?
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
GOAT Box Office Collection: தளபதி மாஸ்..! 3 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த தி கோட் - அப்ப ரூ.200 கோடி? 3வது நாள் வசூல் நிலவரம்
GOAT Box Office Collection: தளபதி மாஸ்..! 3 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த தி கோட் - அப்ப ரூ.200 கோடி? 3வது நாள் வசூல் நிலவரம்
Embed widget