மேலும் அறிய

அதிகாலையில் அதிர்ச்சி... கோவத்துடன் வந்த காட்டு யானைகள்... நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்

மூன்று காட்டு யானைகள் விவசாய பயிர்களை சாப்பிடாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து, ரேஷன் அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரங்கள் உள்ளன. இவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இந்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால், மூன்று மாதங்களுக்கு கோவை வனக்கோட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவ்வாறு வலசை செல்லும் நூற்றுக்கணக்கான யானைகள் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியான சிறுமுகை பகுதிக்கு வந்து பின்னர் அங்கிருந்து நீலகிரிக்கும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கும் பிரிந்து செல்வது வழக்கம்.

ஆண்டுதோறும் யானைகளின் வலசை காலம் மூன்று மாதங்கள் மட்டும் இருந்தாலும் யானைகள் வலசை சென்றாலும் குறிப்பிட்ட வனக்கோட்டங்களில் வனக்கோட்டத்தில் வனச்சரகத்தில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்த நிலையில் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரத்தில் உள்ள மூன்று காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய பயிர்களை சாப்பிடாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து, ரேஷன் அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.


அதிகாலையில் அதிர்ச்சி...  கோவத்துடன் வந்த காட்டு யானைகள்... நொடிப்பொழுதில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்

இந்நிலையில் இந்த மூன்று யானைகளும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்தது. அப்போது அங்கு கட்டிட  தொழிலாளர்கள் தங்கி உள்ள தகர செட்டுகளை உடைத்து மூன்று யானைகளும் அரிசியை தேடியது. இதனை தொடர்ந்து தகர செட்டுக்குள் தங்கி இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உயிர் பயத்தால் உள்ளேயே பதுங்கிக் கொண்டனர். தொடர்ந்து எதிர் வீட்டில் குடியிருக்கும் நபர்கள் வட மாநில தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒரு தொழிலாளி மட்டும் தகர செட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அப்போது அவரை ஆண் யானை ஒன்று தாக்க முன்ற நிலையில் யானையிடம் இருந்து அத்தொழிலாளி தப்பித்து அருகில் உள்ள குடியிருப்புகள் புகுந்து உயிர் தப்பினார்.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தாய் யானையுடன் வரும் குட்டியானை மற்றும் ஆண் யானை என ஒரு குழுவாக இந்த மூன்று யானைகள் உள்ளன. இந்த மூன்று யானைகளும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை மட்டுமே குறி வைத்து அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுகிறது. எந்த வீடாக இருந்தாலும் அதனை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அரிசியை சாப்பிட்டு வருகிறது. மற்ற யானைகள் ஊருக்குள் புகுந்தால் விவசாய பயிர்களை மட்டும்  சேதப்படுத்துவதோடு நின்று விடுகிறது. ஆனால் இந்த மூன்று யானைகளும் எங்கு அரிசி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து அந்த வீட்டை மட்டும் உடைத்து உள்ளே செல்கிறது.

இதன் காரணமாக மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் வந்து இந்த யானைகளை விரட்டினாலும், இந்த யானைகள் பயப்படுவதில்லை. அதே சமயம் நீதிமன்ற உத்தரவை காட்டி பட்டாசு வெடித்து யானைகளை விரட்டவும்  வனத்துறையினர் தயங்குகின்றனர். வீடுகளை உடைக்கும் போது உள்ளே இருப்பவர்களின் மனநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. உடனடியாக இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி வெளியே வராத வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget