மேலும் அறிய

'சட்டவிரோத செயல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்' - மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி

போதைப்பொருள் புழக்கம் என்பது கண்டிப்பாக பெரிய குற்றம் என்பதால் நிச்சயமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனை சிறப்பாக செய்ய உள்ளதோடு, சட்டவிரோத செயல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கு மண்டல காவல் துறை தலைவராக இருந்த சுதாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அப்பதவிக்கு பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்கு மண்டல காவல் துறை தலைவராக பவானீஸ்வரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் கோவை பந்தய சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மேற்கு மண்டலத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நல்ல முறையில் சிறப்பாக பணி செய்து வருகிறார்கள். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண் குழந்தைகள் மற்றும் அவர்கள் மீது நடத்தப்படும் குற்றத்தை எப்படி தடுக்கலாம் என விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.

அதே போல போதைப் பொருள் புழக்கம் என்பது கண்டிப்பாக பெரிய குற்றம் என்பதால் நிச்சயமாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனை சிறப்பாக செய்ய உள்ளதாகவும் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சட்டத்திற்கு புறம்பாக எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக எது நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார். போதை பொருள் புழக்கத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் வருகிற 11ம் தேதி ஆன்டி ட்ரக் நாள்  சம்பந்தமாக அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிகாரிகளிடம் கலந்து பேசி  போதைப்பொருள் எந்த வழிகளில் வருகிறதோ அதனை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளேன். சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். எல்லை பகுதிகளில் இருந்து எப்படி போதை பொருள் உள்ளே வருகின்றது என்பது குறித்து ஆய்வு செய்து அதனை தடுக்க இன்னமும் எப்படி வலுப்படுத்த முடியுமோ அதனை செய்ய உள்ளோம் என்றும், வட மாநில தொழிலாளர்கள் தென் மாநில தொழிலாளர்கள் என பாகுபாடு பார்க்காமல் யார் குற்றம் செய்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேற்கு மண்டலம் அன்பான மக்கள் அவர்களுக்கு அமைதியான முறையில் நல்ல வாழ்க்கை கொடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். பொதுமக்களுக்கு மனுநீதி நாள் போன்றவை  நடத்தப்பட்டு அதில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது அவர்களுக்கு என்ன தேவையோ சட்ட ரீதியாக உறுதியாக செய்து கொடுக்கப்படும் எனவும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி கூறினார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut (13-07-2026): முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
coimbatore power cut: கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget