மேலும் அறிய

‘தமிழுக்கும் தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பெருமை சேர்க்கிறார்’ - வானதி சீனிவாசன்

"தமிழகத்தின் பெருமிதமான நம் ஆதினத்து செங்கோல், இந்திய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்க இருக்கிறது. இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்றாகும்."

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர், மத்திய அமைச்சர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு வரும் போதெல்லாம், தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாசாரம் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேசுவது வழக்கமானது. அதுவும் தேர்தல் நேரம் என்றால், கூடுதலாக தமிழ் பற்றி பேசுவார்கள் தமிழிலேயே சில வார்த்தைகள் பேசுவார்கள். ஆனால், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் தேர்தல் அரசியலுக்காக எதையும் சிந்திப்பவர் அல்ல. தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் ஏன் தமிழர்களே இல்லாத, தமிழர்களுக்கே தொடர்பில்லாத கூட்டங்களில் கூட, தமிழ் மொழி பற்றி தமிழ் கலாச்சாரம் பற்றியும் பெருமையாக பேசியிருக்கிறார் பேசி வருகிறார்.

திருக்குறள், சங்க இலக்கியங்கள், மகாகவி பாரதியார் பாடல்கள் என தமிழின் இலக்கியச் செழுமை, அதில் உள்ள உலகளாவிய மனிதநேய, சமத்துவ சிந்தனைகளை பல்வேறு உலக நாடுகளிலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அரங்குகளிலும் பிரதமர் மோடி பேசி வருகிறார். "உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். அது இந்தியாவின் பெருமிதம். இந்தியாவின் சொத்து. ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழியை கற்க வேண்டும். தமிழர்களிடம் உள்ள மொழிப்பற்று தமிழ் கலாசாரத்தின் மீதான விடாப்பிடியான பற்று அனைவருக்கும் இருக்க வேண்டும்" என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.  

ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பயணத்தை முடித்து கொண்டு இப்போது டெல்லி திரும்பியதும் வரவேற்பு கூட்டத்தில் பேசும்போதுகூட, பப்புவா நியூகினியா நாட்டில், 'டோக் பிசின்" மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டதை நினைவுகூர்ந்து, தமிழ் உலகின் தொன்மையான மொழி என்பதை மீண்டும் பறைசாற்றி இருக்கிறார். தமிழின் உலக தூதராக மாறி, தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் பறைசாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழுக்கு மற்றொரு மணி மகுடத்தை அளித்திருக்கிறார். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாசாரங்கள் கொண்ட, 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் இந்திய திருநாடு, மக்களாட்சியில் உலகிற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது. மக்களாட்சியின் மகத்துவமான நமது இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை மே 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

ஜனநாயகத்தின் சின்னமான இந்திய நாடாளுமன்றத்தில், சபாநாயகர் இருக்கைக்கு அருகில், இந்தியா விடுதலை அடைந்தபோது தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 'செங்கோல்' வைக்கப்பட உள்ளது. இது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமையாகும். 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இந்தியாவில் பாரம்பரியமாக ஆட்சி மாற்றம் நடக்கும்போது பின்பற்றப்பட்ட நடைமுறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூதறிஞர் ராஜாஜியின் ஏற்பாட்டில், திருவாவடுதுறை  ஆதீனத்திலிருந்து செங்கோல் தயாரித்து எடுத்துச் செல்லப்பட்டு, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவிடம், தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு வழங்கப்பட்டது. அடிமைச் சங்கிலியில் இருந்து விடுபட்டு, சுதந்திரப் பறவையாகி விட்டோம் என்பதை அறிவித்தது, தமிழையும், சைவத்தையும் இரு கண்களாக போற்றும் திருவாவடுதுறை ஆதீனத்துச் செங்கோல் தான். 

இப்படி நமது பாரதத்தின் பழமையான வரலாறு, கலாசாரத்தோடு தொடர்புடைய, தமிழகத்தின் பெருமிதமான நம் ஆதினத்து செங்கோல், இந்திய நாடாளுமன்றத்தை நிரந்தரமாக அலங்கரிக்க இருக்கிறது. இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளக்கூடிய ஒன்றாகும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்க முடிவு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Embed widget