மேலும் அறிய

Crime : பொள்ளாச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது ; 56 சவரன் நகைகள் பறிமுதல்

ஆறு வழக்குகளில் தொடர்புடைய 28 லட்சம் மதிப்பிலான 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராமச்சந்திரன் மீது மதுரையில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடனை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, கோட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்ததில் அடையாளம் தெரியாத ஒரு நபர் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தனிப்படை காவல் துறையினர் பழைய குற்றவாளிகளை தணிக்கை செய்தும், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் யமஹா ரே வாகனத்தில் அந்த நபர் சுற்றி திரிவதும், வீட்டில் ஆட்கள் இல்லாத பகுதிகளில் நோட்டம் விடுவதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.


Crime : பொள்ளாச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது ; 56 சவரன் நகைகள் பறிமுதல்

இதன் பேரில் குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கோட்டூர் பகுதியில் குற்றவாளி சுற்றி வருவது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் வசிக்கும் வீட்டில் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இவர் மீது மதுரை மாவட்டத்தில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் கோட்டூர் பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதியில் வீடு புகுந்து திருடிய ஆறு வழக்குகளில் தொடர்புடைய 28 லட்சம் மதிப்பிலான 56 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் ராமச்சந்திரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறுகையில்,இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராமச்சந்திரன் மீது மதுரையில் 15 திருட்டு வழக்குகள் உள்ளது. ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபட்டதால், குடும்பத்துடன் இடம் பெயர்ந்து கோட்டூர் பகுதியில் வீடு எடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள் உரியவடம் ஒப்படைக்கப்படும். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்களுக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (29-8-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (29-8-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
திருப்பூர்வாசிகளுக்கு குட் நியூஸ்! நொய்யல் ரோட்டில் உருவாகும் பிரம்மாண்ட 'Food Street'! என்னென்ன வசதிகள் தெரியுமா?
Tiruppur Food Street: திருப்பூர்வாசிகளுக்கு குட் நியூஸ்!நொய்யல் ரோட்டில் உருவாகும் பிரம்மாண்ட 'Food Street'! என்னென்ன வசதிகள் தெரியுமா?
ரூம் எடுத்து தங்கும் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் கெடு! கோவை காவல்துறையின் 24x7 அதிரடி பிளான்!
ரூம் எடுத்து தங்கும் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் கெடு! கோவை காவல்துறையின் 24x7 அதிரடி பிளான்!
கோவை வனப்பகுதியில் அதிரடி ஆக்ஷன்! பிரபல ரிசார்ட்டுகளுக்கு செக்! அதிர வைக்கும் பின்னணி!
கோவை வனப்பகுதியில் அதிரடி ஆக்ஷன்! பிரபல ரிசார்ட்டுகளுக்கு செக்! அதிர வைக்கும் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
China Warning to Nepal: இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
Embed widget