மேலும் அறிய

பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்: 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போல, மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஆறு மாதம் முன்பு 14 வயது சிறுமியை, 17 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அச்சிறுமியை, அந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் தன் நண்பர்களிடம் சிறுமியுடன் பழகி வருவதை கூறியுள்ளார். இதையடுத்து மகரஜோதி, நாகராஜ், முத்து முருகன், பிரவீன் மற்றும் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறார்கள் என ஆறு பேர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். இதில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரித்த காவல் துறையினர் 6 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்தனர். இதையடுத்து 6 பேர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 18 வயதிற்கும் கீழ் உள்ள இரண்டு சிறார்களையும் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.


பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்: 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது!

இதுகுறித்து பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி கூறுகையில், ”கடந்த ஏழு மாதங்களில் போக்சோ சட்டத்தில் பொள்ளாச்சியில் 15 வழக்குகளும், வால்பாறையில் 4 வழக்குகளும் என மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளின்  நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக அணுகி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து சரி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , பெண்கள் எங்கேயும் எப்போதும் அவசர உதவிக்கு 181 என்ற எண்ணை அழைக்கலாம் எனவும், குழந்தைகள் தொடர்பான பிரச்சினைக்கு   1098 அழைக்கலாம் எனவும், பெண்களுக்கு மன ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் சம்மந்தமாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தயங்காமல் கோவை மாவட்ட காவல் துறையை தொடர்பு கொள்ள 7708100100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்களை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போல, மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                   

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Embed widget