மேலும் அறிய

கோவை கார் வெடிப்பு வழக்கு ; வெளியான புதிய தகவல்கள் இதோ..!

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே வசிக்கும் அப்துல் மஜீத் என்பவர் உயிரிழந்தவரை அடையாளம் காட்டினார் எனவும், அவரது வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை வசித்து வாடகைக்கு வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், யார் யாரை சந்தித்துள்ளார்கள், வெடி மருந்து வாங்கியது உள்ளிட்டவை குறித்து 5 பேரையும் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை கார் வெடிப்பு வழக்கு ; வெளியான புதிய தகவல்கள் இதோ..!

இதனிடையே கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்செண்ட் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஒரு மடிக்கணினி கைப்பற்றப்பட்டது. ஆன்லைனில் வெடி மருந்துகளை அப்சர் கான் வாங்கிக் கொடுத்தது தெரியவந்ததை அடுத்து, அப்சர்கானை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

இதனிடையே கைது செய்யபப்ட்ட 5 பேரிடம் காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து 3 நாட்கள் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதையடுத்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே வசிக்கும் அப்துல் மஜீத் என்பவர் உயிரிழந்தவர் ஜமேசா முபின் என்பதை அடையாளம் காட்டினார் எனவும், அப்துல் மஜீத் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை வசித்து வாடகைக்கு வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார். சம்பவம் நடந்த கோவிலுக்கு அருகே ஒரு மாதம் முன்பு வரை வசித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ரியாஸ் முதலில் போன் விபரம் கூறியதும், ஆனால் தன்னை கைது செய்து தன் மீது பொய் வழக்கு போட்டிருப்பதாகவும், ரியாஸ், நவாஸ் இருவரும் தான் சம்பவம் நடந்த இடத்தை காவல் துறையினருக்கு தெரிவித்து அவர்கள் வர உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விரைவில் புலன் விசாரணையை துவக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 10:12 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: மருந்து கடைக்காரர், காதலன் கைது! அதிர்ச்சி தகவல்
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: மருந்து கடைக்காரர், காதலன் கைது! அதிர்ச்சி தகவல்
DMK On BJP: ”After All மோடி, அமித் ஷா” யாருக்கு பயம்? இந்தி இல்லன்னா நானே ரெடி - பாஜகவை பந்தாடிய ஆ.ராசா
DMK On BJP: ”After All மோடி, அமித் ஷா” யாருக்கு பயம்? இந்தி இல்லன்னா நானே ரெடி - பாஜகவை பந்தாடிய ஆ.ராசா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: மருந்து கடைக்காரர், காதலன் கைது! அதிர்ச்சி தகவல்
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: மருந்து கடைக்காரர், காதலன் கைது! அதிர்ச்சி தகவல்
DMK On BJP: ”After All மோடி, அமித் ஷா” யாருக்கு பயம்? இந்தி இல்லன்னா நானே ரெடி - பாஜகவை பந்தாடிய ஆ.ராசா
DMK On BJP: ”After All மோடி, அமித் ஷா” யாருக்கு பயம்? இந்தி இல்லன்னா நானே ரெடி - பாஜகவை பந்தாடிய ஆ.ராசா
சின்ன வயசுல பண்ணாத தப்பே இல்லை.. திமிரோட இருந்தேன்.. மனம் திறந்த பாடகர் கிரிஷ்
சின்ன வயசுல பண்ணாத தப்பே இல்லை.. திமிரோட இருந்தேன்.. மனம் திறந்த பாடகர் கிரிஷ்
ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் -  ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் - ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா..  ”பாடல் வரியில் பட தலைப்புகள்..  ஆதங்கப்பட்ட வைரமுத்து
Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா.. ”பாடல் வரியில் பட தலைப்புகள்.. ஆதங்கப்பட்ட வைரமுத்து
Embed widget