![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘கோவை, மதுரை, திருச்சி, சென்னை அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை வார்டு தயார்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
"கோவை, மதுரை, திருச்சி, சென்னை அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாளை முதல் குரங்கு அம்மை வார்டு செயல்பட துவங்கும்."
![‘கோவை, மதுரை, திருச்சி, சென்னை அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை வார்டு தயார்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் Minister M. Subramanian said that Monkeypox Ward is ready in Govt Hospitals in Coimbatore, Madurai, Trichy and Chennai. ‘கோவை, மதுரை, திருச்சி, சென்னை அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை வார்டு தயார்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/ce4b4cec87b0c7e8bd2435b4c7da9da41658151924_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரங்கு அம்மை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் இருக்கும் பன்னாட்டு விமானங்களில் 63 வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். குரங்கு அம்மை தடுப்பு பணிகள் குறித்து கோவை விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கோவையில் வெளிநாட்டில் இருந்து இரு விமானங்கள் வருகின்றது. தினமும் 170 பயணிகள் வரை வெளிநாடுளில் இருந்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் ரேன்டமாக சோதனை நடத்தப்படுகின்றது. இதுவரை ஒருவக்கு கூட கொரொனா, குரங்கு அம்மை கண்டறியப்படவில்லை. விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் மையம் தயார் நிலையில் இருக்கின்றது. ஒரு படுக்கை அறையும் தயாராக இருக்கின்றது.
கோவை, மதுரை, திருச்சி, சென்னை அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகமாக 10 படுக்கைகளுடன் கூடிய குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாளை முதல் குரங்கு அம்மை வார்டு செயல்பட துவங்கும். ஐசிஎம்ஆர் 15 ஆய்வகங்கள் மூலம் குரங்கு அம்மை கண்டறிய ஒன்றிய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதில் ஒன்றை தமிழகத்திற்கு கேட்டுள்ளோம். அது வந்தால் கிங் இன்ஸ்டியுட்டில் அமைக்கப்படும்.
கேரளா, தமிழகம் இடையே 13 பாதைகளில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் பொது சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு இருக்கின்றனர். குரங்கு அம்மை பாதிப்புகளை ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார். முகம், முழங்கை பகுதிகளில் கொப்புளம் இருந்தால் அவர்களை கண்காணிக்கப்படுகின்றனர். கொரொனா பாதிப்பு கூட துவங்கி இருக்கின்றது. முக்கவசம், சானிடைசர் பயன்பாட்டை அதிகரிக்க அறிவுறுத்தி வருகின்றோம்.
முதல் தவனை தடுப்பூசி 96 சதவீதமும், இரண்டாவது தவணை 86 சதவீதமும், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. வரும் ஞாயிற்று கிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகின்றது. ஆயுஷ்மான் பாரத் பணிகளில் தொய்வு என ஒன்றிய நிதி் இணை அமைச்சர் சொல்லி இருப்பதில் தெளிவில்லை. இதுகுறித்து எதில் சரி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டினால் அதை சரி செய்ய தயார். துறை சார்ந்தவர்கள் பாராட்டி இருக்கும் நிலையில், அவர் தெரியாமல் சொல்லி இருப்பார். மக்களின் வீடுகளுக்கு தேடி சென்று மருத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. கடைகோடி மனிதனுக்கும் தமிழகத்தில் சிகிச்சைகள் கிடைக்கின்றது” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)