மேலும் அறிய

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது.

கோவையில் போதை ஆசாமிகள் போல் நடித்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை கைது செய்த காவல் துறையினர் 1750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் மதுக் குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் பலர் அதிக விலை கொடுத்து மது வாங்கி குடிக்கவும் தயாராக உள்ளனர். இதனை பயன்படுத்தி மதுபானங்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது பரவலாக நடந்து வருகிறது. சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருபவர்களை காவல் துறையினர் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு ஆயத் தீர்வை  அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கரூர் மாவட்டம் வேலகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகேசன் (42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது.  மேலும் முருகேசன் இரவு நேரங்களில் தனக்கு தெரிந்தவர்களுக்கு குடோனில் வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கையும், களவுமாக பிடிக்க காவல் துறையினர் முடிவு செய்தனர். பின்னர் போதை ஆசாமிகள் போல நடித்து முருகேசனிடம் சென்று மது வேண்டுமென கேட்டுள்ளனர். அப்போது பணத்தை பெற்றுக் கொண்டு மதுபானத்தை கொடுத்த போது, முருகேசனை மது விலக்கு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1750 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முருகேசனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் முருகேசன் தனது குடும்பத்துடன் இடையர்பாளையம் பகுதியில் வசித்து வருவதும், தடாகம் சாலையில் குடோன் வைத்து காலி மது பாட்டில்களை வாங்கி கம்பெனிகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக நகர மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை இலாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த முருகேசனை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
TN POLITICS 2025 : பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
2025 பிளாஷ் பேக்: பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Embed widget