மேலும் அறிய

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது.

கோவையில் போதை ஆசாமிகள் போல் நடித்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை கைது செய்த காவல் துறையினர் 1750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் மதுக் குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் பலர் அதிக விலை கொடுத்து மது வாங்கி குடிக்கவும் தயாராக உள்ளனர். இதனை பயன்படுத்தி மதுபானங்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது பரவலாக நடந்து வருகிறது. சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருபவர்களை காவல் துறையினர் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு ஆயத் தீர்வை  அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கரூர் மாவட்டம் வேலகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகேசன் (42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது.  மேலும் முருகேசன் இரவு நேரங்களில் தனக்கு தெரிந்தவர்களுக்கு குடோனில் வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கையும், களவுமாக பிடிக்க காவல் துறையினர் முடிவு செய்தனர். பின்னர் போதை ஆசாமிகள் போல நடித்து முருகேசனிடம் சென்று மது வேண்டுமென கேட்டுள்ளனர். அப்போது பணத்தை பெற்றுக் கொண்டு மதுபானத்தை கொடுத்த போது, முருகேசனை மது விலக்கு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1750 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முருகேசனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் முருகேசன் தனது குடும்பத்துடன் இடையர்பாளையம் பகுதியில் வசித்து வருவதும், தடாகம் சாலையில் குடோன் வைத்து காலி மது பாட்டில்களை வாங்கி கம்பெனிகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக நகர மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை இலாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த முருகேசனை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
Embed widget