மேலும் அறிய

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது.

கோவையில் போதை ஆசாமிகள் போல் நடித்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை கைது செய்த காவல் துறையினர் 1750 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் மதுக் குடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் பலர் அதிக விலை கொடுத்து மது வாங்கி குடிக்கவும் தயாராக உள்ளனர். இதனை பயன்படுத்தி மதுபானங்களை சிலர் வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது பரவலாக நடந்து வருகிறது. சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருபவர்களை காவல் துறையினர் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

கோவை தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவை பெரியநாயக்கன்பாளையம் மது விலக்கு ஆயத் தீர்வை  அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கரூர் மாவட்டம் வேலகவுண்டன்பட்டியை சேர்ந்த முருகேசன் (42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது.  மேலும் முருகேசன் இரவு நேரங்களில் தனக்கு தெரிந்தவர்களுக்கு குடோனில் வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கையும், களவுமாக பிடிக்க காவல் துறையினர் முடிவு செய்தனர். பின்னர் போதை ஆசாமிகள் போல நடித்து முருகேசனிடம் சென்று மது வேண்டுமென கேட்டுள்ளனர். அப்போது பணத்தை பெற்றுக் கொண்டு மதுபானத்தை கொடுத்த போது, முருகேசனை மது விலக்கு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

போதை ஆசாமி போல நடித்து மது விற்ற நபர் கைது

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1750 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முருகேசனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் முருகேசன் தனது குடும்பத்துடன் இடையர்பாளையம் பகுதியில் வசித்து வருவதும், தடாகம் சாலையில் குடோன் வைத்து காலி மது பாட்டில்களை வாங்கி கம்பெனிகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக நகர மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும், ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று கொள்ளை இலாபம் பார்க்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த முருகேசனை நீதிமன்ற காவலில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

 

தலைப்பு செய்திகள்

TASMAC shops : சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு
சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு
Child Abuse: திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
Diesel Supply : ’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ மீண்டும் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!

வீடியோ

Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION
Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC shops : சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு
சொன்னதை செய்து காட்டிய சிஎம் விஜய்.! மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் - லிஸ்டை வெளியிட்ட தமிழக அரசு
Child Abuse: திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
Diesel Supply : ’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ மீண்டும் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
Kia Upcoming SUV: சோனெட், செல்டோஸ் ரெண்டுமே வேண்டாமா? மிடில் பட்ஜெட்டில் கியாவின் புதிய எஸ்யுவி - எப்படி இருக்கு?
சோனெட், செல்டோஸ் ரெண்டுமே வேண்டாமா? மிடில் பட்ஜெட்டில் கியாவின் புதிய SUV - எப்படி இருக்கு?
Ration card : ரேஷன் கார்டு ரெடி.! வீடு தேடி வரும் 46,000 ஸ்மார்ட் கார்டு- உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
ரேஷன் கார்டு ரெடி.! வீடு தேடி வரும் 46,000 ஸ்மார்ட் கார்டு- உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
Alto K10 : ‘ஒரு லிட்டருக்கு இவ்வளவு கிலோ மீட்டரா?’ நடுத்த மக்களின் நம்பிக்கை பெற்ற ஆல்டோ K10..!
‘லிட்டருக்கு இவ்வளவு கிலோ மீட்டரா?’ ஆல்டோ K10 சிறப்பம்சங்கள்..!
Embed widget