மேலும் அறிய

Jos Alukkas Robbery : ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை : தந்தை தற்கொலை.. முக்கிய குற்றவாளி விஜய் கைது

கொள்ளை வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும், அக்கடையில் கொள்ளையடிக்க கடை ஊழியர்கள் உதவினார்களா? என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் கிளை, கோவை காந்திபுரம் நூறடி சாலையில் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைக்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதியன்று இரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம்போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். பின்னர் காலையில் வழக்கம் போல கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்தபோது, தங்கநகைகள், வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடையின் ஏசி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்த பகுதி வழியாக உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் கடைக்குள் உள்ளே நுழைந்த நபர் கண்காணிப்பு கேமரா முன்பு சட்டையில் முகத்தை மறைத்த மாதிரி சென்றதும், அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Jos Alukkas Robbery : ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை : தந்தை தற்கொலை.. முக்கிய குற்றவாளி விஜய் கைது

முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 2 கிலோ தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புலன் விசாரணையில் 4 கிலோ 600 கிராம் தங்க நகைகள், வைரம், பிளாட்டிணம், 700 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தருமபுரியை சேர்ந்த விஜய் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டதும், அவர் ஆனைமலை பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் விஜயை பிடிக்க ஆனைமலை பிடிக்க சென்றபோது, வேறொரு வழக்கில் கைது செய்ய தருமபுரி காவல் துறையினரும் வந்துள்ளனர். அப்போது வீட்டின் கூரையை பிரித்து கொண்டு விஜய் தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்க திட்டமிடவும், நகைகளை மறைத்து வைக்கவும், தப்பி செல்லவும் உதவிய நர்மதா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தற்போது 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நகைகளை மறைத்து வைத்திருந்த தர்மபுரியை சேர்ந்த விஜயின் மாமியார் யோகராணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ தங்கம், வைரம், பிளாட்டிணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இவ்வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 95 சதவீத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே விஜய்யின் தந்தை முனிரத்தினம் தற்கொலை செய்து கொண்டார். தருமபுரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த விஜயை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் விஜய் சென்னையில் இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சென்னை சென்ர காவல் துறையினர் சபரி மலைக்கு மாலை அணிந்தபடி, தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், அக்கடையில் கொள்ளையடிக்க கடை ஊழியர்கள் உதவினார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget