மேலும் அறிய

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; குற்றம்சாட்டப்பட்ட 2 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

கோடநாடு கொள்ளை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, உதயகுமார், ஜம்ஷீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகிய நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருபவர்களிடம் கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொள்ளை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, உதயகுமார், ஜம்ஷீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகிய நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த திங்கள்கிழமை சம்மன் வழங்கினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தீபு மற்றும் உதயகுமார் ஆகியோரை இன்றும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரை வரும் 30ஆம் தேதியும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு மூன்றாவது குற்றவாளியாகவும், ஜம்ஷீர் அலி நான்காவது குற்றவாளியாகவும், உதயகுமார் ஏழாவது குற்றவாளியாகவும் ஜித்தின் ஜாய் பத்தாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் பதிவான தகவல் பரிமாறிங்களை  சேகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபு மற்றும் உதயகுமார் ஆகியோர் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு வழக்கு பின்னணி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர். இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

”விஜய் பிரச்சாரத்துக்கு அழைத்தால் போக மாட்டேன்” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்...
”விஜய் பிரச்சாரத்துக்கு அழைத்தால் போக மாட்டேன்” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்...
 எச்சரிக்கையை மீறிய கடைகள்... வெள்ளியங்கிரி மலை பகுதியில் திடீர் சோதனை...
 எச்சரிக்கையை மீறிய கடைகள்... வெள்ளியங்கிரி மலை பகுதியில் திடீர் சோதனை...
Tirupur power cut: திருப்பூர் மாவட்டத்தில் நாளை (23-02-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
Tirupur power cut: திருப்பூர் மாவட்டத்தில் நாளை (23-02-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
"இது வெறும் பள்ளி இல்லை… எங்கள் வாழ்க்கை" - கோவையில் திருமண ஊர்வலம் போல நடைபெற்ற பள்ளி விழா...
ABP Premium

வீடியோ

DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்
OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்
DMK Vs Congress | டர்ரு விடும் காங்கிரஸ் ஸ்டாலின் சீக்ரெட் Operation தட்டி தூக்கிய தளபதிகள்
MK Stalin | ”ஸ்டாலின் அல்லது மம்தா” I.N.D.I.A கூட்டணி தலைவர் பதவி! சீனுக்கு வந்த உத்தவ் தாக்கரே
AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi slams Congress:
PM Modi slams Congress: "நாட்டையே அசிங்கப்படுத்திட்டீங்க" காங்கிரஸை அக்கு அக்காய் விமர்சித்த பிரதமர் மோடி
ADMK: பில்லே சாட்சி பிரச்சாரம்.. ஸ்பீடை ஏத்தும் அதிமுக! வீடு,வீடாய் போகச் சொன்ன இபிஎஸ்!
ADMK: பில்லே சாட்சி பிரச்சாரம்.. ஸ்பீடை ஏத்தும் அதிமுக! வீடு,வீடாய் போகச் சொன்ன இபிஎஸ்!
T20 WC ENG vs SL: தட்டுத் தடுமாறிய இ்ங்கிலாந்து! பவுலிங்கில் மிரட்டிய இலங்கை - சூப்பர் 8ல் வெற்றி யாருக்கு?
T20 WC ENG vs SL: தட்டுத் தடுமாறிய இ்ங்கிலாந்து! பவுலிங்கில் மிரட்டிய இலங்கை - சூப்பர் 8ல் வெற்றி யாருக்கு?
ஒரே சார்ஜில் 530 கிலோமீட்டர் மைலேஜ்.. 7 சீட்டர்.. BYD eMax 7 மின்சார கார் எப்படி?
ஒரே சார்ஜில் 530 கிலோமீட்டர் மைலேஜ்.. 7 சீட்டர்.. BYD eMax 7 மின்சார கார் எப்படி?
DMK alliance seat allocation : எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? ஆட்டத்தை ஆரம்பித்த திமுக- யார் யாருக்கு அழைப்பு.?
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? ஆட்டத்தை ஆரம்பித்த திமுக- யார் யாருக்கு அழைப்பு.?
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. சென்சார் போர்டை விளாசித் தள்ளிய விஷால் - இப்படியா சொன்னாரு?
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. சென்சார் போர்டை விளாசித் தள்ளிய விஷால் - இப்படியா சொன்னாரு?
Kader Mohideen Health update: திடீரென சரிந்த காதர் மொகிதீன்.! அறிவாலயத்தில் நடந்தது என்ன.? உடல்நிலை இப்போ எப்படி இருக்கு.?
திடீரென சரிந்த காதர் மொகிதீன்.! அறிவாலயத்தில் நடந்தது என்ன.? உடல்நிலை இப்போ எப்படி இருக்கு.?
Namo Bharat Train: 82.15KM தூரம்..! 55 நிமிஷம் தான், 180KM ஸ்பீட் - 12KM பூமிக்கு கீழ - மிரட்டலான நமோ பாரத் ரயில்
Namo Bharat Train: 82.15KM தூரம்..! 55 நிமிஷம் தான், 180KM ஸ்பீட் - 12KM பூமிக்கு கீழ - மிரட்டலான நமோ பாரத் ரயில்
Embed widget