மேலும் அறிய

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; குற்றம்சாட்டப்பட்ட 2 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

கோடநாடு கொள்ளை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, உதயகுமார், ஜம்ஷீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகிய நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருபவர்களிடம் கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொள்ளை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, உதயகுமார், ஜம்ஷீர் அலி, ஜித்தன் ஜாய் ஆகிய நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த திங்கள்கிழமை சம்மன் வழங்கினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தீபு மற்றும் உதயகுமார் ஆகியோரை இன்றும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரை வரும் 30ஆம் தேதியும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீபு மூன்றாவது குற்றவாளியாகவும், ஜம்ஷீர் அலி நான்காவது குற்றவாளியாகவும், உதயகுமார் ஏழாவது குற்றவாளியாகவும் ஜித்தின் ஜாய் பத்தாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அதில் பதிவான தகவல் பரிமாறிங்களை  சேகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபு மற்றும் உதயகுமார் ஆகியோர் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு வழக்கு பின்னணி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர். இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Pump Industry: ‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!
‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Honda Shine Sales: அடேங்கப்பா.! விற்பனையில் சக்கை போடு போட்ட ஹோண்டா ஷைன்.! ஒரே மாசத்துல லட்சக்கணக்கில் சேல்ஸா.?!
அடேங்கப்பா.! விற்பனையில் சக்கை போடு போட்ட ஹோண்டா ஷைன்.! ஒரே மாசத்துல லட்சக்கணக்கில் சேல்ஸா.?!
Trump Vs Zelensky: ஜெலன்ஸ்கிக்கு ஷாக் கொடுத்த ட்ரம்ப்.! ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு ஆர்டர் போட்ட ட்ரம்ப்; என்ன அது.?
ஜெலன்ஸ்கிக்கு ஷாக் கொடுத்த ட்ரம்ப்.! ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு ஆர்டர் போட்ட ட்ரம்ப்; என்ன அது.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! புதன் கிழமை (16.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! புதன் கிழமை (16.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Embed widget