மேலும் அறிய

கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்; வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்னும் சில நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்; வாகன ஓட்டிகள் அவதி

இந்நிலையில் கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் பரவலாக கனமழை பெய்தது. காந்திபுரம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது. இதன் காரணமாக ரயில் நிலையம், சாய்பாபா காலணி, இராமநாதபுரம், வடகோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள லங்கா கார்னர் பகுதி ரயில்வே தரைப்பாலத்தின் அடியில் வெள்ள நீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல அவிநாசி சாலை மேம்பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல கோவையில் பல்வேறு சாலைகள் சேதமடைந்து உள்ள நிலையில், மழை நீரும் சேர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்; வாகன ஓட்டிகள் அவதி

கோவை மாநகரப் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அடியிலும், பல்வேறு சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதும், போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதைத் தடுக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தென் மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 210 மி.மீ மழை பெய்யும். நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் 43 மி.மீ, ஜூலையில் 69 மி.மீ, ஆகஸ்டில் 31 மி.மீ மற்றும் செப்டம்பரில் 68 மி.மீ என மொத்தம் 211 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய ஜூன் மாதம் 10 மி.மீ வரை மட்டுமே மழை பதிவானது. பின்னர், ஜூலை மாதம் 2-வது வாரத்தில் பருவமழை தீவிரமடைந்தது. ஆகஸ்டு முதல்வாரத்தில் மழையின் தீவிரம் குறைந்தது. பின்னர், மீண்டும் தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் முடிய இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில், இன்னும் கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget