மேலும் அறிய

Crime : யானைத் தந்தம் விற்க முயன்ற வேட்டைத் தடுப்பு காவலர் உட்பட 8 பேர் கைது

வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு கோவை மண்டல குழுவினருக்கு மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் யானை தந்தங்கள் விற்பனை நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய வனம் மற்றும் வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு தெற்கு மண்டலம் மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு கோவை மண்டல குழுவினருக்கு மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் யானை தந்தங்கள் விற்பனை நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனப் பணியாளர்கள் கடந்த 3 ஆம் தேதி பகல் சுமார் 12.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

அப்போது தனியார் பூங்கா அருகே பிரதீஸ் மற்றும் சின்ன பாண்டி என்பவர்கள் யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக சுப்பிரமணி என்பவரிடம் கட்டை பையில் மறைத்து வைத்திருந்த முறிந்த நிலையில் இருந்த யானை தந்தத்தை காட்டியுள்ளனர். அப்போது  வனப்பணியாளர்கள் சுற்றி வளைத்து கையும் களவுமாக 3 பேரையும் பிடித்தனர். வனத்துறையினர் பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போது பிரதீஷ், குணசேகரன், மற்றும் சின்ன பாண்டி ஆகியோர் தனியார் பூங்கா அருகே வந்து சுப்பிரமணியிடம் தங்கத்தை விற்பதற்காக விலை பேசி உள்ளதும், பிரதிஷ் என்பவர் ராஜ்குமார் என்பவரிடமிருந்து தந்தத்தை வாங்கியுள்ளதும், ராஜ்குமாருக்கு நஞ்சுண்டன் என்பவர் தந்தத்தை கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ராஜ்குமார், குணசேகரன், மனோஜ் மற்றும் நஞ்சுண்டன் ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் வனத்துறையினர் நஞ்சுண்டன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விளாமுண்டி வனச்சரகத்தில் பணி புரியும் வேட்டை தடுப்பு காவலரான மணிகண்டன் என்பவர் யானை தந்தத்தை கொடுத்துள்ளது தெரியவந்தது. இதன்பேரில் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்ட போது 2017 ஆம் ஆண்டு தாம்புக் கரை காப்புக்காடு, தாம்புக்கரை பள்ளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது வனப்பகுதியில் கிடந்த யானை தந்தத்தை எடுத்து மறைத்து வைத்ததும், நஞ்சுண்டன் யானை தந்தம் கேட்டதால் யானை தந்தத்தை எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது.

பின்னர் நஞ்சுண்டன் தன்னிடமிருந்த யானை தந்தத்தை ராஜ்குமார் மூலம் பிரதீஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். இது குறித்து வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கோத்தகிரியைச் சேர்ந்த பிரதிஷ் (27), சோலூர் மட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (26), ராஜ்குமார் (41), அரக்கோடு கரிக்கையூரைச் சேர்ந்த நஞ்சுண்டன் (36), பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் (27), சிறுமுகையைச் சேர்ந்த சின்ன பாண்டி (45), கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (43), சோலூர் மட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (23) ஆகிய 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு கொண்டு வந்த யானை தந்தம், மரக்கட்டையாலான போலியான யானை தந்தம் மற்றும் கார் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வனத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
Coimbatore power cut: கோவையன்ஸ் உஷார்! நாளை (14-07-2026) பவர் கட்: உங்கள் பகுதிக்கும் உண்டா? முழு பட்டியல் உள்ளே!
கோவையன்ஸ் உஷார்! நாளை (14-07-2026) பவர் கட்: உங்கள் பகுதிக்கும் உண்டா? முழு பட்டியல் உள்ளே!
coimbatore power cut (13-07-2026): முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Embed widget