மேலும் அறிய

Crime : யானைத் தந்தம் விற்க முயன்ற வேட்டைத் தடுப்பு காவலர் உட்பட 8 பேர் கைது

வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு கோவை மண்டல குழுவினருக்கு மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் யானை தந்தங்கள் விற்பனை நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய வனம் மற்றும் வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு தெற்கு மண்டலம் மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு கோவை மண்டல குழுவினருக்கு மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் யானை தந்தங்கள் விற்பனை நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனப் பணியாளர்கள் கடந்த 3 ஆம் தேதி பகல் சுமார் 12.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மறைந்திருந்து கண்காணித்தனர்.

அப்போது தனியார் பூங்கா அருகே பிரதீஸ் மற்றும் சின்ன பாண்டி என்பவர்கள் யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக சுப்பிரமணி என்பவரிடம் கட்டை பையில் மறைத்து வைத்திருந்த முறிந்த நிலையில் இருந்த யானை தந்தத்தை காட்டியுள்ளனர். அப்போது  வனப்பணியாளர்கள் சுற்றி வளைத்து கையும் களவுமாக 3 பேரையும் பிடித்தனர். வனத்துறையினர் பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போது பிரதீஷ், குணசேகரன், மற்றும் சின்ன பாண்டி ஆகியோர் தனியார் பூங்கா அருகே வந்து சுப்பிரமணியிடம் தங்கத்தை விற்பதற்காக விலை பேசி உள்ளதும், பிரதிஷ் என்பவர் ராஜ்குமார் என்பவரிடமிருந்து தந்தத்தை வாங்கியுள்ளதும், ராஜ்குமாருக்கு நஞ்சுண்டன் என்பவர் தந்தத்தை கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ராஜ்குமார், குணசேகரன், மனோஜ் மற்றும் நஞ்சுண்டன் ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் வனத்துறையினர் நஞ்சுண்டன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விளாமுண்டி வனச்சரகத்தில் பணி புரியும் வேட்டை தடுப்பு காவலரான மணிகண்டன் என்பவர் யானை தந்தத்தை கொடுத்துள்ளது தெரியவந்தது. இதன்பேரில் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்ட போது 2017 ஆம் ஆண்டு தாம்புக் கரை காப்புக்காடு, தாம்புக்கரை பள்ளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது வனப்பகுதியில் கிடந்த யானை தந்தத்தை எடுத்து மறைத்து வைத்ததும், நஞ்சுண்டன் யானை தந்தம் கேட்டதால் யானை தந்தத்தை எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது.

பின்னர் நஞ்சுண்டன் தன்னிடமிருந்த யானை தந்தத்தை ராஜ்குமார் மூலம் பிரதீஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். இது குறித்து வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கோத்தகிரியைச் சேர்ந்த பிரதிஷ் (27), சோலூர் மட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (26), ராஜ்குமார் (41), அரக்கோடு கரிக்கையூரைச் சேர்ந்த நஞ்சுண்டன் (36), பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் (27), சிறுமுகையைச் சேர்ந்த சின்ன பாண்டி (45), கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (43), சோலூர் மட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (23) ஆகிய 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு கொண்டு வந்த யானை தந்தம், மரக்கட்டையாலான போலியான யானை தந்தம் மற்றும் கார் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வனத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
ABP Southern Rising Summit 2025 LIVE: கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
ABP Southern Rising Summit 2025 LIVE: கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Embed widget