மேலும் அறிய

கோவை : உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் ; உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

எலச்சிபாளையம் கிராமத்தில் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் இன்று துவங்கியதை கண்டித்து 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயரழுத்த மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய விளை நிலங்கள் வழியாக தமிழக அரசின் மின் வாரியத்தின் மூலமாக அரசூர் முதல் ஈங்கூர் வரை 230 கே.வி. மின் வழித் தடம் அமைக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, எலச்சி பாளையம் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட செம்மாண்டம்பாளையம், ராக்கியாபாளையம், செட்டிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், செங்கப்பள்ளி,  ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் வழியே உயர் மின் கோபுரமும், மின்கம்பியும் அமைக்கப்படுகிறது. இதனால், இந்நிலத்தில் பயிர் செய்துள்ள தென்னை, சோளம், பருத்தி, காய்கறிப் பயிர்கள், வேம்பு உள்ளிட்ட வளர்ந்த மரங்கள் சேதமடைவதாகவும், நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி உயர் மின் கோபுரம் மாற்றுப் பாதையில் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கடந்த 7 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு கோவை மாவட்டத்தில் ஒரு இழப்பீடும், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு இழப்பீடும் கணக்கிடப்படுகிறது என புகார் எழுந்துள்ளது. இதனால் கோவை  மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எலச்சிபாளையம் கிராமத்தில் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் இன்று துவங்கியதை  கண்டித்து 10க்கும் மேற்பட்ட விவசாயிகள், எலச்சிபாளையத்தில் உள்ள உயரழுத்த மின் கோபுரம்  மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வருவாய்த் துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய இழப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு உயர் மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ”தற்போது இந்த பகுதியில் நில மதிப்பு அதிகமாக உள்ள நிலையில் மிகச் சொற்பமான தொகையை இழப்பீடாக மின்சார வாரிய அதிகாரிகள் தருகின்றனர். நிலம் வழங்கிய எங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச உள்ளோம். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்தனர். உயர் மின் கோபுரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget