மேலும் அறிய

கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் விவசாயி கைது

சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலி காரணமாக காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயி மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. துடியலூர் அடுத்த வரப்பாளையம், பன்னிமடை பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் ஏராளமான யானைகள் இந்த பகுதி வழியாக வலசை செல்வது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வரப்பாளையம் கிராமத்திற்குள் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது வாழை தோட்டத்திற்குள் சென்றுள்ளது. இது குறித்து மனோகரன் வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினர் யானைகளை அருகில் உள்ள வனப் பகுதிக்கு விரட்டினர்.

இதனிடையே பிப்ரவரி 12 ஆம் தேதியன்று காலை மனோகரின் வாழை தோட்டத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த வனத் துறையினர். ஆய்வு மேற்கொண்டதில் உயிரிழந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், அதன் தும்பிக்கை தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. மின் வாரிய அதிகாரிகள், கால் நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் சம்பவ நடந்த தோட்டத்தை சுற்றிலும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து யானை இறப்பு குறித்து தோட்ட உரிமையாளர் மனோகரனிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் விவசாயி கைது

அதில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலி காரணமாக காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயி மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் வனத் துறையினர் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக பதுங்கியிருந்தவர்கள் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள், நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று தலைமறைவாக இருந்த விவசாயி மனோகரன் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்துள்ளார். அப்போது பன்னிமடை பேருந்து நிலையம் பகுதியில் மனோகரனை வனத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மகன் நரேஷை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.  இதனிடையே காட்டு யானைகள் உயிரிழப்புகள் தொடர்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில் இன்று விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தற்போது விவசாயி மனோகரன் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
Embed widget