மேலும் அறிய

கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் விவசாயி கைது

சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலி காரணமாக காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயி மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. துடியலூர் அடுத்த வரப்பாளையம், பன்னிமடை பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் ஏராளமான யானைகள் இந்த பகுதி வழியாக வலசை செல்வது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வரப்பாளையம் கிராமத்திற்குள் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள மனோகரன் என்பவரது வாழை தோட்டத்திற்குள் சென்றுள்ளது. இது குறித்து மனோகரன் வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத் துறையினர் யானைகளை அருகில் உள்ள வனப் பகுதிக்கு விரட்டினர்.

இதனிடையே பிப்ரவரி 12 ஆம் தேதியன்று காலை மனோகரின் வாழை தோட்டத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த வனத் துறையினர். ஆய்வு மேற்கொண்டதில் உயிரிழந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், அதன் தும்பிக்கை தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. மின் வாரிய அதிகாரிகள், கால் நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் சம்பவ நடந்த தோட்டத்தை சுற்றிலும் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து யானை இறப்பு குறித்து தோட்ட உரிமையாளர் மனோகரனிடம் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


கோவை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த வழக்கில் விவசாயி கைது

அதில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலி காரணமாக காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விவசாயி மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் வனத் துறையினர் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக பதுங்கியிருந்தவர்கள் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள், நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று தலைமறைவாக இருந்த விவசாயி மனோகரன் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்துள்ளார். அப்போது பன்னிமடை பேருந்து நிலையம் பகுதியில் மனோகரனை வனத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மகன் நரேஷை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.  இதனிடையே காட்டு யானைகள் உயிரிழப்புகள் தொடர்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில் இன்று விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தற்போது விவசாயி மனோகரன் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
"கிக் பாக்சிங்கில் கோவை மாணவர்கள் கோல்டன் வேட்டை" - 20 தங்கம் வென்று சாதனை...
Coimbatore power cut: கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Embed widget