Coimbatore Shutdown: கோவை மக்களே உசார்.! நாளை (29.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது.!
Coimbatore Power Shutdown January 29,2025: கோவையில் மின் பராமரிப்பு காரணமாக, நாளை புதன் கிழமை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில், நாளை ஜனவரி 29 ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு சரி செய்யப்படும்.
கோவையில் நாளை மின்தடை: 29-01-2025
இந்நிலையில், கோயம்பத்தூரில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
கோவையில் நாளை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆவாரம்பாளையம், காமதேனு நகர், நவ இந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், கணேஷ்நகர், பாப்பநாயக்கன் பாளையம், அலமுநகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, மின் மயானம், காந்தி மாநகர் மற்றும் புதியவர் நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ”சீமான் விடுதலை புலிகளை காட்டி கொடுத்தார் ” -ராஜீவ் காந்தி பகீர் குற்றச்சாட்டு
மின் பராமரிப்பு :
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.
இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்து வைத்துக் கொள்ளுங்கள்.




















