Coimbatore Power Cut : கொங்கு மக்களே நாளை(02.08.25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை சனிக்கிழமை (02.08.2025) மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

Coimbatore Power Shutdown: கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை (02.08.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
உக்கடம் துணை மின் நிலையம்: வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக் கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் புறவழிச்சாலை, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனுசாமி நகர், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ மனை, ரயில் நிலையம், லாரிப் பேட்டை.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















