மேலும் அறிய

Covid 19 Positive | கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா ; பள்ளியை மூட சுகாதாரத்துறை உத்தரவு..!

School Students Test Positive for Covid 19: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக தினசரி கொரோனா(Coronavirus) பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த இந்த 3 மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுகாதாரத் துறையினர் உடனடியாக தகவல் அளித்தனர். இதையடுத்து 3 மாணவர்களுக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த இரண்டு மாணவர்களின் பெற்றோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும், இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இன்று சுல்தான்பேட்டை உயர்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பள்ளியை மூட சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நாமக்கல், அரியலூர், தஞ்சை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், கோவை மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
TN Weather: கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
coimbatore power cut: கோவை மக்களே உஷார்! - நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் கரண்ட் இருக்காது
கோவை மக்களே உஷார்! - நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் கரண்ட் இருக்காது
coimbatore power cut: கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ
கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget