மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மின்னஞ்சல் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

கோவை துடியலூரில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் பல்வேறு அமைப்புகள் பெயரில் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி 13 குண்டுகள் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்துள்ளோம் என்றோம் எங்கள் தலைவரின் அதிரத்தையும் அடையாளமாக மார்ச் 31 முதல் தொடங்கும் சட்டபூர்வமாக மற்றதாக்கும் வாரத்தை நேரடி நடவடிக்கை வாரமாக அறிவித்துள்ளோம் எனவே ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோவை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்துள்ளது. மேலும், இதேபோல் கோவையில் உள்ள பல்வேறு ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் மிரட்டல் கடிதங்களை வந்துள்ளது தெரியவந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர். மின்னஞ்சல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















