மேலும் அறிய

Avinashi flyover: இறுதிகட்டம் - தமிழ்நாட்டின் நீளமான உயரடுக்கு மேம்பாலம் - 4 வழி, 10.1 கி.மீ., எப்போது திறப்பு விழா?

Avinashi flyover: கோவை மாவட்டத்தின் அவினாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் 10.1 கிலோ மீட்டர் நீள மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் 93 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன.

Avinashi flyover: கோவை மாவட்டத்தின் அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள 10.1 கிலோ மீட்டர் நீள மேம்பாலம் ஜுலை மாதத்தில் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கோவை அவினாசி மேம்பாலம்:

கோவை அவினாசிபாளைய போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வாக உயர் அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கோல்ட்வின்ஸ் பகுதியில் தொடங்கி உப்பிலிபாளையம் வரையிலான இந்த மேம்பாலம், ஆயிரத்து 791 கோடியே 22 லட்ச ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தான் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சரவணன் அவினாசி மேம்பால கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, தரமான முறையில் சரியான வழிகாட்டுதல்களின்படியே, பணிகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார். அதோடு, தற்போது வரை 93 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா எப்போது?

மேம்பால கட்டுமான பணிகள் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்திற்கான திட்டத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கின. இடையில் கொரோனா பரவல் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டாலும், அதைதொடர்ந்து முழு வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வெறும் 7 சதவிகித பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளதால், அதையும் விரைவில் முடித்து வரும் ஜுலை மாதத்தில் மேம்பாலத்தை திறக்க நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்கிரேட், கட்டுமான விவரங்கள்:

தற்போது கட்டப்பட்டு வரும் மேம்பாலமானது 17.25 மீட்டர் அகலத்தில் 10.1 கிலோ மீட்டர் நீளத்திற்கானதாகும். உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி, கோல்வின்ஸ் KMCH வரை இந்த மேம்பாலம் நீள்கிறது. இந்த மேம்பாலத்திற்காக மொத்தம் 305 பில்லர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப் கல்லூரி மற்றும் சித்ரா ஆகிய பகுதிகளில், உள்ளே வருவதற்கும், வெளியே போவதற்கும் என மொத்தம் 8 ராம்ப்கள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, அவினாசி மேம்பாலத்தை சின்னியம்பாலையத்திலிருந்து நீலாம்பூர் வரையில், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 600 கோடி ரூபாயில் நீட்டிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவினாசி மேம்பாலத்தின் முக்கியத்துவம்:

நான்கு வழிப்பாதையை கொண்டுள்ள இந்த உயரடுக்கு மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழ்நாட்டின் நீளமான உயரடுக்கு மேம்பாலம் எனும் பெருமையை பெறும். அதோடு, அரூர் - துரவூர் உயரடுக்கு நெடுஞ்சாலை மற்றும் பி.வி. நரசிம்மராவ் விரைவுச்சாலையை தொடர்ந்து நாட்டிலேயே மூன்றாவது நீளமான உயரடுக்கு மேம்பாலம் எனும் பெருமையையும் அவினாசி மேம்பாலம் பெறும். நகரின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, 12 சந்திப்புகளை இணைக்கக் கூடிய அவினாசி சாலையின் வழியே இந்த மேம்பாலம் இணைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் பலன்கள்:

  • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: புதிய பலாத்தின் மூலம் டிராபிக் சிக்னல் பிரச்னை இன்றி உப்பிலிபாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ் இடையேயான பயண நேரத்தில் சுமார் 15 முதல் 20 நிமிடங்களை சேமிக்கலாம்
  • இணைப்பு மேம்பாடு: அண்ணா சாலை, ஹோப் கல்லூரி, பீளமேடு மற்றும் விமான நிலைய சந்திப்பு போன்ற நகரின் பிற முக்கிய பகுதிகளுக்கான இணைப்பையும் மேம்பாலம் மேம்படுத்துகிறது
  • விமான நிலையம் அணுகல்: சின்னியம்பாளையம் முதல் நீலம்பூர் வரை மேம்பாலத்தை 5 கிமீ நீட்டிக்கும் திட்டமானது திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வரும் மக்கள் விமான நிலையத்தை எளிதில் அணுக உதவும்
  • எதிர்கால திட்டம்: அடுத்த 30 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன்படி, மேம்பாலத்தின் நான்குவழிச்சாலை மற்றும் தரைப்பகுதியில் 6 வழிப்பாதைகள் என மொத்தம் 10 வழிகளில் போக்குவரத்து இயங்க இந்த மேம்பாலம் உதவுகிறது.
  • பொருளாதார வளர்ச்சி: அவினாசி சாலையில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஐடி பார்க்குகள் மற்றும் வணிகள் வளாகங்கள் நிறைந்துள்ளன. அவற்றிற்கான அணுகல் மேம்பாலம் மூலம் எளிதாகும். இதனால் பொருளாதார மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி உறுதி செய்யப்படும். டைடல் பார்க் போன்ற இடங்களுக்கு வேலைக்கு செல்வோருக்கான பயணமும் எளிதாகும்.
  • பொதுப்போக்குவரத்து: போக்குவரத்து சிக்கல் போன்ற பிரசனைகள் இன்றி பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்தில் பயணிப்பது மேம்பாலத்தால் எளிதாகும்.  இந்த மேம்பாலத்தில் ஐந்து பாதசாரி சுரங்கப்பாதைகள் மற்றும் கிருஷ்ணம்மாள் கல்லூரிக்கு அருகில் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட்களுடன் கூடிய முன்மொழியப்பட்ட நடைபாதை பாலம் ஆகியவை உள்ளன. இது பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் அணுகலை மேம்படுத்துகிறது
  • உள்ளூர் இணைப்பு: அவினாசி சாலையானது கோவையை ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 544 ஆகியவற்றை இணைப்பதால் உள்ளூர் இணைப்பில் மேம்பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த மேம்பாலம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரெடி… WiFi, CCTV உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறப்பு...
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரெடி… WiFi, CCTV உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் திறப்பு...
₹250 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை திறப்பு – மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புதிய Road
₹250 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை திறப்பு – மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புதிய Road
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget