மேலும் அறிய

திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

"திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என சொல்ல முடியாது. திமுகவில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி இல்லத்தில் காவல்துறை சோதனை நடைபெற்றுள்ளது"

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மேடையில் உரையாற்றிய அண்ணாமலை, “26 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு இணைந்துக்கொண்டு இருக்கிறோம். ஏன்? மாற்றம் வந்துவிடாதா என்றுதான். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாட்டாலும் இப்படி தான் இருப்பார்கள் என்பதற்கு ஜெயின் கமிசன் அறிக்கைதான் சான்று.  ராஜிவ் காந்தி கொலை செய்யபடும் முன்பு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. உளவுத்துறை அறிக்கை மீது திமுக அன்று கவனம் செலுத்தவில்லை.

கோட்டை ஈஸ்வரன் கோவில் சம்பவம் நடந்த போது ஆட்சியில் இருந்தவர்கள் தான் திமுக. தேர்தலில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் மாறப்போவதில்லை. இந்த கூட்டம் மதரீதியான கூட்டம் இல்லை, தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டம் தான் இது. இன்று கோவை ஆபத்தில் இருந்து தப்பித்து விட்டதா? இன்னும் தப்பவில்லை. தமிழ்நாடு இன்னும் ஆபத்தில் இருந்து தப்பவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சம்பவம் தற்கொலை படை தாக்குதல் என்றோம். ஆனால் சிலிண்டர் விபத்து என இவர்கள் என சொல்லுகிறார்கள். உயிரிழந்த முபின் வீட்டில் 130 கிலோ வெடிபொருட்கள் கிடைத்தது. இதை பார்த்த பிறகும் இது சிலிண்டர் விபத்து என்றார்கள் காவல் துறை சொல்லுகிறது. கோவை மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தேர்தல் தான் 2024 நாடாளுமன்ற தேர்தல். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 16 பேரை வெளியே விட ஆட்சி செய்த கட்சியும், ஆட்சியில் உள்ள கட்சியும் விடுவிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.


திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ் மேடையில் அரசியல் பேசக்கூடாது. ஆனால் இன்று நான் பேசியாக வேண்டிய சூழலில் உள்ளேன். பாராளுமன்ற வேட்பாளர்களின் முதல் வேலை இங்கு நினைவு துண் கட்டுவது தான். 2024 ஆம் ஆண்டு நாம் ஜன்னலை திறப்போம். 2024ம் ஆண்டு கதவை திறப்போம். நினைவு தூண்களில் உயிரிழந்த இஸ்லாமிய 6 பேரின் பெயர்களும் இடம்பெறும். தீவிரவாதிக்கும் மதம் தெரியாது. மதம் பிடித்த யானைவிட, மதத்தை தவறாக படித்துவிட்டு கோவையில் திரிகிறார்கள். தமிழ்நாட்டில் கோவைக்கு இரண்டாவது என்.ஐ.ஏ காவல் நிலையம் இங்க வர வேண்டும். முக்கியமான வழக்குகளை இங்கு நடத்த வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதி உருவாகும் இடத்திலிருந்து பிடிக்க வேண்டும். இதை தான் மத்திய அரசு சொல்கிறது. கோவை, ஈரோடு, சேலத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் இருக்கும் இடமாக உள்ளது. வருகின்ற தேர்தலில் பாஜக உறுப்பினரை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என சொல்ல முடியாது. திமுகவில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி இல்லத்தில் காவல்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் கூட்டணி வைக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் பாப்புலர் பிரண்ட் அமைப்பிற்கும் என்ன தொடர்பு?இந்தியாவின் மீது உலக நாடுகளின் கண்கள் உள்ளது. உலகில் எந்த நாடுகளுக்கும் வல்லரசு என்ற வார்த்தை பொருந்தாது. உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பிரச்சனை உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு மோடி அரசு நமக்கு தேவை. வலிமையான நாட்டை உருவாக்க பாஜக வேண்டும். எங்கே வேண்டுமானலும் குண்டு வெடிக்கும். அதை மாற்ற பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget