மேலும் அறிய

Crime : கோவையில் 15 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

ஆனைமலை பகுதியில் 15 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 62 வயது முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். 62 வயதான இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடராஜன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து, சிறுமிகளிடம் ஆபாசமாக தொட்டு பேசுவது என பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவரது பாலியல் அத்துமீறல்களை வீட்டில் தெரிவித்தால் அவமானம் என்று கருதி வீட்டில் சொல்லாமலே, பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் துறையினர் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அம்மாணவிகள் படித்து வரும் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போது மாணவிகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' குறித்தும், பாலியல் அத்துமீறல் குறித்தும் எடுத்துரைத்துக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடமும் கருத்து கேட்டு, அவர்களது சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.

அப்போது மளிகைக் கடைக்காரரின் பாலியல் தொல்லை குறித்து சொல்வதற்கு இதுதான் சரியான நேரம் எனக் கருதிய 13 வயது மாணவி ஒருவர் பேசுவதற்கு எழுந்தார். தலைமை ஆசிரியையிடம், பேசிய மாணவி, அவர் வசிக்கும் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நடராஜன் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவர் மட்டுமல்லாமல் அங்கு படிக்கும் 9 முதல் 13 வயது வரையிலான மேலும் 14 மாணவிகள் தங்களுக்கு அந்த கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை, உடனடியாக இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் மளிகை கடைக்காரர் நடராஜனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடராஜனை காவல் துறையினர் கைது செய்தனர். நடராஜன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்தும், அவரால் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனாரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாகராஜபுரம் பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில், வயிறு பெரிதாகி வந்ததால் கர்ப்பமானது வெளியே தெரிந்து விடும் என்ற அச்சத்தில் நேற்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அச்சிறுமி அனுமதிக்கப்பட்ட போது, அளித்த தகவலின் பேரில் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக காரணமாக இருந்த பக்கத்து வீட்டு இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Embed widget