மேலும் அறிய

Crime : கோவையில் 15 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

ஆனைமலை பகுதியில் 15 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 62 வயது முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். 62 வயதான இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடராஜன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து, சிறுமிகளிடம் ஆபாசமாக தொட்டு பேசுவது என பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவரது பாலியல் அத்துமீறல்களை வீட்டில் தெரிவித்தால் அவமானம் என்று கருதி வீட்டில் சொல்லாமலே, பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் துறையினர் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அம்மாணவிகள் படித்து வரும் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போது மாணவிகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' குறித்தும், பாலியல் அத்துமீறல் குறித்தும் எடுத்துரைத்துக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடமும் கருத்து கேட்டு, அவர்களது சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.

அப்போது மளிகைக் கடைக்காரரின் பாலியல் தொல்லை குறித்து சொல்வதற்கு இதுதான் சரியான நேரம் எனக் கருதிய 13 வயது மாணவி ஒருவர் பேசுவதற்கு எழுந்தார். தலைமை ஆசிரியையிடம், பேசிய மாணவி, அவர் வசிக்கும் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நடராஜன் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அவர் மட்டுமல்லாமல் அங்கு படிக்கும் 9 முதல் 13 வயது வரையிலான மேலும் 14 மாணவிகள் தங்களுக்கு அந்த கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை, உடனடியாக இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் மளிகை கடைக்காரர் நடராஜனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடராஜனை காவல் துறையினர் கைது செய்தனர். நடராஜன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்தும், அவரால் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனாரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாகராஜபுரம் பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில், வயிறு பெரிதாகி வந்ததால் கர்ப்பமானது வெளியே தெரிந்து விடும் என்ற அச்சத்தில் நேற்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அச்சிறுமி அனுமதிக்கப்பட்ட போது, அளித்த தகவலின் பேரில் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக காரணமாக இருந்த பக்கத்து வீட்டு இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
BSNL Introduced Wi-Fi calling facility: மொபைலில் சிக்னல் இல்லையா.!இனி கவலையே வேண்டாம்- புதிய Wi-Fi வசதியை அறிவித்த BSNL
இனி மொபைலில் சிக்னல் இல்லாமலே பேசலாம்.! கட்டணம் எதுவும் இல்லை- BSNL புதிய Wi-Fi காலிங் வசதி அறிமுகம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Embed widget