மேலும் அறிய

நீலகிரி : அதிகளவில் சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவிகள் மயக்கம் ; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு மாணவியும் என்னால்தான் முடியும் என்று மாறி மாறி பேசியதாகவும் தெரிகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அதிகளவில் சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒருநாளைக்கு ஒரு மாத்திரை வீதம் 50 வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி உருது பள்ளியில் குழந்தைகளிடம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது.

அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு மாணவியும் என்னால் தான் முடியும் என்று மாறி மாறி பேசியதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் யாரால் முடியும் என்பதை நிரூபித்து காட்டி விடலாம் என்று கூறி, மாத்திரைகளை சாக்லேட் சாப்பிடுவது போல் தொடர்ந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மாத்திரை செயல்பட தொடங்கியதால் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் வகுப்பறையில் மயங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து உடனடியாக மாணவிகளை மீட்டு உதகை அரசு மருததுவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. குல்துன் நிஷா, ஆயிஷா, ஜெய்பா, நாசியா ஆகிய 4 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், ”4 மாணவிகளும் மாத்திரையை இடைவெளி விடாமல் வேகமாக சாப்பிட்டுள்ளனர். அதில் 4 மாணவிகள் 30 க்கும் மேற்பட்ட மாத்திரைகள் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயக்கம் அடைந்தவர்களை மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர். இதுகுறித்து உதகை அரசு மருத்துமனை முதல்வர் மனோகரி கூறுகையில், ”தற்போது மாணவிகள் நிலை நன்றாக உள்ளது. மாத்திரை சாப்பிட்டு 12 முதல் 14 மணி நேரத்திற்கு பின்னர்தான் அதன் வீரியம் தெரியவரும். மாணவிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ”குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்று தெரியவில்லை. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். இந்த சம்பவம் குறித்து உதகை மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
TN Weather: கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
coimbatore power cut: கோவை மக்களே உஷார்! - நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் கரண்ட் இருக்காது
கோவை மக்களே உஷார்! - நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் கரண்ட் இருக்காது
coimbatore power cut: கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ
கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget