மேலும் அறிய

சொத்து வாங்குவதில் கவனம் !! வாரிசு சொத்துகளில் சிக்கல் தவிர்க்க வழிகள் !! உரிமையாளர் யார் ?

சொத்தின் உண்மையான உரிமையாளர் யார் , அவருக்கு எங்கிருந்து வந்தது , வாரிசுதாரர்கள் யார் என்பதை ஆராய வேண்டும்

உண்மையான உரிமையாளரா ?

பொதுவாக வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அதை தற்போது வைத்திருப்பவர் உண்மையான உரிமையாளரா என்பதை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, அந்த நபருக்கு சம்பந்தப்பட்ட சொத்து எப்போது , என்ன வழியில் வந்தது என்பதை விசாரித்து அறிய வேண்டும்.

உண்மை தன்மை சரிபார்ப்பது அவசியம்

இதில் ஒரு நபர் சுயமாக சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்தை , சுய நினைவுடன் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். அந்த சொத்து மீது அவர் வேறு எந்த கடனும் , ஒப்பந்த ஆவணங்களும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டால் போதும். ஆனால், பொது அதிகார முகவர், பரம்பரை சொத்தின் வாரிசு ஆகிய நபர்களிடம் இருந்து சொத்து விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது.

என்ன பிரச்சனை வந்து விட போகிறது ?

சட்டப்படி இவர்களுக்கு சொத்தை விற்பதற்கான முழு உரிமை இருந்தாலும், அதில் உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டியது அவசியம். ஆனால், சில இடங்களில் பாகப் பிரிவினை வாயிலாக சொத்து பெற்றவர் அதை விற்கும் நிலையில், வாங்கும் நபர்கள் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்தின் அசல் உரிமையாளர் இறந்த நிலையில் அவரது வாரிசுகள் அந்த சொத்துக்கு உரிய நபர்கள் தானே அதில் என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். இதில் சில விஷயங்களை மிக நுட்பமாக பார்த்தால் மட்டுமே உண்மை நிலவரத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக, ஒரு நபர் இறந்த நிலையில், அவரது மூன்று வாரிசுகள். உரிய சான்றிதழ் பெற்று, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதன் அடிப்படையில் அவர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் நடந்து விடுகிறது. இந்த பட்டா கூட்டு பட்டா என்ற அடிப்படையில் இருக்கும் நிலையில் யாருக்கு எந்த பாகம் என்பது சொத்து வாங்க வரும் நபருக்கு புரியாது என்பதால் இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இது போன்ற நிலையில், சொத்து பெற்ற வாரிசுகள் தங்களுக்கான பங்கு அளவு என்ன என்பதை தெளிவு படுத்தாமல் விற்பனைக்கு செல்ல கூடாது. மூன்று வாரிசுகள் இருந்தால், அந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே ஒரு வாரிசு விற்க முடியும் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

விற்பனைக்கு பின் சொத்து பிரச்சனையை தவிர்க்க 

இதை கவனிக்காமல், அந்த சொத்து முழுவதையும் அல்லது பகுதியை வாங்கினால், பிற வாரிசுகள் அந்த பத்திரத்தில் கையெழுத்து போடுவது கட்டாயம். இவ்வாறு பிற வாரிசுகள் கையெழுத்து இன்றி நீங்கள் சொத்து வாங்கினால், பிற்காலத்தில் சட்ட ரீதியாக பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பாகப் பிரிவினை நடந்த சொத்து வாங்கும் போது, அனைத்து வாரிசுகளும் ஒருமித்து கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் விற்பனைக்கு பின் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் பதிவுத்துறை அலுவலர்கள்.

தலைப்பு செய்திகள்

வட சென்னை மக்களுக்கு திடீர் நற்செய்தி! நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்?
வடசென்னை மக்களுக்கு நற்செய்தி! நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்?
Chennai to Tirupati in 90 Mins: இனி திருப்பதி போக 1.5 மணி நேரம் போதும்! பாடி - திருநின்றவூர் ரூட்டில் பறக்கப்போகும் மாஸ் மேம்பாலம்!
Chennai to Tirupati in 90 Mins: இனி திருப்பதி போக 1.5 மணி நேரம் போதும்! பாடி - திருநின்றவூர் ரூட்டில் பறக்கப்போகும் மாஸ் மேம்பாலம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
கேளம்பாக்கத்தில் காதல் விவகாரம்.. இளைஞர் உயிரிழப்பு! 5 பேர் கைது; தவெக எடுத்த அதிரடி முடிவு!
கேளம்பாக்கத்தில் காதல் விவகாரம்.. இளைஞர் உயிரிழப்பு! 5 பேர் கைது; தவெக எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
CM Vijay: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சென்று மரியாதை செலுத்துவாரா விஜய்?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
"எத்தனை ஆட்சி மாறினாலும் எங்க நிலைமை மாறல!" - மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் பொங்கி வழிந்த மனுக்கள்..! 
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Embed widget