சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?; ஏரியில் எவ்வளவு நீர் இருப்பு இருக்கு? - அதிகாரிகள் சொன்ன தகவல்
சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வளத்துறை செயலாளர் சத்திய பிரதா சாகு தகவல்

சென்னை குடிநீருக்காக மாதம் ஒன்றுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில் நீர் இருப்பு 7.5 டிஎம்சியாக உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நீர்வளத்துறை செயலாளர் பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் ஆய்வு செய்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக நீர்வளத்துறை செயலாளராக பொறுப்பேற்ற சத்ய பிரதா சாகு முதன்முறையாக செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரிகளின் உறுதி தன்மை நீர் இருப்பு நீர்மட்டம் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை குடிநீருக்காக மாதம் ஒன்றுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது நீர் இருப்பு 7.5 டிஎம்சி தண்ணீர் உள்ளதாகவும், இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், ஏரிகளில் உள்ள உறுதித் தன்மை நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ததாகவும், தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் தொழில்நுட்ப வல்லுநர்களை ஆய்வு செய்து முதல்வருக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும் எனவும், பூண்டி ஏரியை சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் ஆகியோருடன் உடனிருந்தனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















