மேலும் அறிய

மணல் கொள்ளை; நாக நதி ஆற்றில் இறங்கி ஆர்பாட்டம்!

கண்ணமங்கலம் அருகே உள்ள நாகநதி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க காவல் துறை மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆற்றங்கரையில் கிராம மக்கள் இறங்கி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமப்பகுதியில் நாகநதி ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு குடிநீருக்கும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைத்து வருகிறது. நாகநதி ஆற்றில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றிலிருந்து மணல் எடுத்து கரையில் குவித்து வருகின்றனர். சமூக விரோதிகள் கரையில் குவித்து வைத்த மணல் ஈரம் காய்ந்தவுடன் சமூக விரோதிகள் மணலை கடத்தி விடுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை ஆரணி வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் காவல்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென குற்றம்சாட்டுகின்றனர். அதனால் ஆத்திரமடைந்த நல்லூர் கிராமவாசி மக்கள் மகாநதி ஆற்றில் திடீரென இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


மணல் கொள்ளை; நாக நதி ஆற்றில் இறங்கி ஆர்பாட்டம்!

 

கிராம மக்களிடம் தொடர்பு கொண்டு பேசியபோது , ‛எங்களது கிராமத்தைச் சுற்றிலும் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாயத்தை நம்பி தான் எங்களுடைய வாழ்வாதாரமே உள்ளது. ஆனால் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக திகழ்வது நாகநதி ஆறு. அதனை நம்பிதான் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறோம் .தற்போது நாக நதியில் தண்ணீர் செல்கின்றது.  இதில் நாங்க மட்டும் இல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதேபோன்று சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்களுக்கு குடி தண்ணீர் பற்றாக்குறையும் ஆற்றின் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. வரும் காலங்களில் மணல் கொள்ளையர்களால் நாக நதியின் தடையம் மறைந்து போகும். நிலைமை ஏற்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் நாகநதி ஆற்றின் மணல் கொள்ளையர்கள் மணலை  சுரண்டுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் குடிதண்ணீர் தட்டுப்பாடும் மற்றும் விவசாயத்திற்கும் தண்ணீர் தேவை தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தினால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படாமல் இருக்கும் . மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆரணி வருவாய்த்துறை அதிகாரியிடமும் கண்ணமங்கலம் காவல் நிலையத்திலும் பலமுறை புகார் தெரிவித்து இருந்தோம். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மணல் கொள்ளை; நாக நதி ஆற்றில் இறங்கி ஆர்பாட்டம்!

கடந்த 14ஆம் தேதி காட்டுக்காநல்லூர் பகுதி இளைஞர்கள் நாக நதிக்குச் சென்று மாட்டு வண்டி மூலம் மணல் கடத்துபவர்களை தடுத்து எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையில் சேர்ந்த நபர் ஆயுதங்களுடன் ஆட்டுக்கால் நல்லூர் கிராமத்திற்கு சென்று அந்த இளைஞர்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விட்டதாக,’ அப்பகுதி மக்கள் கூறினார்கள். நாகநதி ஆற்றிலிருந்து அள்ளப்பட்டு கரையில் குவித்து வைத்த மணலை புகைப்படம் எடுத்து முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும் அனுப்பவிருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
Embed widget