மேலும் அறிய

திருவண்ணாமலையில் குழந்தையுடன் விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கிணறு தோண்ட விடாமல் தடுக்கும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம், அதேபோன்று இந்த வாரமும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வத்தின் மகன் பார்த்தீபன் இவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் இன்று அவருடைய மனைவி மூன்று குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது விவசாயி பார்த்திபனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.


திருவண்ணாமலையில் குழந்தையுடன் விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

 

அந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பார்த்திபன் வயது (35) இவரது மனைவி அஞ்சலிதேவி வயது (27) இவர்களுக்கு சோனியா வயது (3), திருமாறன் வயது (1), கலைமாறன்(6 மாதம்) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பார்த்திபனுக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் போதிய அளவில் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்க வில்லை இதனால் வருடத்திற்கு 1- முறை மட்டுமே பார்த்தீபன் விவசாயம் செய்யமுடிகிறது. இதனால் விவசாயத்தை மட்டும் நம்பி குடும்பத்தை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இல்லாததால் தனது விவசாய நிலத்தில் கிணறு தோண்ட முடிவெடுத்து கிணறு தோண்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியை துவக்கி உள்ளார்.

 


திருவண்ணாமலையில் குழந்தையுடன் விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

பின்னர் கிணறு தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி பக்கத்து நிலத்துக்காரர்களான குருவன், சேட்டு, அர்ஜுனன், , தவமணி உள்ளிட்ட 8-நபர்கள் பார்த்திபனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து தாக்கியுள்ளனர். இதனால் ஜேசிபி இயந்திரம் கிணறு தோண்ட முடியாமல் அங்கு இருந்து ஜேசிபி சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபன் உடனடியாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு காவல் நிலைய காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட பார்த்திபன் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி சென்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.


திருவண்ணாமலையில் குழந்தையுடன் விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

 

தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கிணறு தோண்ட விடாமல் தடுக்கும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களால் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிணறு தோண்ட விடாமல் தடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென விவசாயி பார்த்திபன் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget