மேலும் அறிய

" கழுத்தை அறுத்து விடுவேன் " என பெண் தூய்மை பணியாளரை மிரட்டிய நபர் !!

சென்னை எழும்பூர் பகுதியில் பெண் தூய்மை பணியாளரை தகாத வார்த்தைகளால் பேசி கையால் தாக்கிய நபர் கைது

சென்னையில் அதிர்ச்சி ; " கழுத்தை அறுத்து விடுவேன் " என பெண் தூய்மை பணியாளரை மிரட்டிய நபர்

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமி ( வயது 43 ) என்பவர், பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலைக்கு சேர்ந்து வேப்பேரி பகுதியில் பணி செய்து வருகிறார்.

விடியற் காலையில் லட்சுமி எழும்பூர், காந்தி இர்வின் பாலம் மற்றும் ஈ.வெ.ரா சாலை சந்திப்பு அருகே நடை பாதையில் துப்புரவு பணி மேற்கொண்டிருந்த போது, அங்கு நடந்து சென்ற ஒரு நபரை ஓரமாக போக சொன்னதாகவும், அதற்கு அந்த நபர் இந்தியில் தகாத வார்த்தைகளால் பேசி , லட்சுமியை தாக்கி விட்டு, கழுத்தை அறுத்து விடுவதாக செய்கை செய்த போது, லட்சுமி சத்தம் போடவே அந்த நபர் தப்பியோடி உள்ளார்.

இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும் படி லட்சுமி எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற ஜம்மு & காஸ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரவீந்தர் சிங் ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவீந்தர் சிங் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

G - Pay செய்வதாக கூறி கார் ஓட்டுநரிடமிருந்து பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது.

சென்னை பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் வசித்து வரும் மணிகண்டன், ( வயது 47 ) என்பவர் வாடகை கார் ஓட்டி வருவதாகவும், கடந்த மாதம் 17 ம் தேி அன்று இரவு கோயம்பேடு, பகுதியிலுள்ள ஒரு டீக்கடை அருகில் காரில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒரு நபர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் ரூ.500 கொடுத்தால் G Pay மூலம் பணத்தை அனுப்புவதாகவும் கூறி, கவனத்தை திசை திருப்பி, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த பணம் ரூ.1,500 ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

இது குறித்து மணிகண்டன் CMBT காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். CMBT காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சாந்தோம் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா (எ) நரேன்ராஜ் ( வயது 19 ) என்பவரை கைது செய்தனர். 

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜோஸ்வா (எ) நரேன்ராஜ் மீது ஏற்கனவே திருட்டு உட்பட 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஜோஸ்வா (எ) நரேன்ராஜ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget