மேலும் அறிய

Thiruvallur Bus Stand: 30 ஆண்டுகால தவிப்பு..! திருவள்ளூர் மக்களுக்கு விடியல், 5 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம், திறப்பு எப்போது?

Tiruvallur New Bus Stand: திருவள்ளூர் மக்களின் 30 ஆண்டுகால ஏக்கத்திற்கு பலனாக, விரைவில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Tiruvallur New Bus Stand: திருவள்ளூரில் 5 ஏக்கர் பரப்பளவில், 33 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகால ஏக்கம்:

தலைநகர் சென்னையின் முதல் அண்டை மாவட்டம் தான் திருவள்ளூர். இந்த நகரம் அந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு நகருக்கான இணைப்பாகவும் உள்ளதன் மூலம், தொழிற்சாலைகளுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாகவும் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அமைந்து இருப்பதால், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருவள்ளூருக்கு தினசரி பயணிக்கின்றனர். இதன காரணமாக, பல்வேறு வழித்தடங்களுக்கு அங்கிருந்து 200-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பிலேயே இருந்தது.

குறுகலான சாலையால் போக்குவரத்து நெரிசல்:

நகராட்சி அந்தஸ்தை கொண்டுள்ள திருவள்ளூரில் தற்போதுள்ள பேருந்து நிலையமானது, வெறும் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மொத்தமாக அங்கு 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். குறுகலான சாலை மற்றும் குறுகலான வெளியேறும் பகுதி போன்ற காரணங்களால், போக்குவரத்து ஓட்டுனர்களே அவதிப்பட்டு வருகின்றனர். மறுபுறம் பேருந்து நிலையத்தைச் சுற்றி பள்ளிகள், பெட்ரோல் பங்க், குடியிருப்புகள், கடைகள் மற்றும் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் திருவள்ளூர் மக்களுக்கு கடும் இன்னலாக உள்ளது. 

5 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்

இதனால் திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க, கடந்த 2023ம் ஆண்டு ஜுலை மாதம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர் அருகில் உள்ள வேடங்கிநல்லூரில், 33 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 15 மாதங்களுக்குள் திட்டப் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பணிகள் தொடர்ந்து மந்தகதியில் நடைபெற்றதால், குறிப்பிட்ட காலத்திற்குள் 60 சதவிகித பணிகள் மட்டுமே முடிவடைந்து இருந்தது. இந்நிலையில் வரும் மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து, புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  அப்படி நடந்தால், திருவள்ளூர் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை பூர்த்தி அடையும். மேலும், நகர்ப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக குறையும்.

புதிய பேருந்து நிலையத்தின் வசதிகள்..!

புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடையும்போது, அதில் ஏராளமான வசதிகள் இடம்பெற உள்ளன. அதன்படி 5,889 ச.மீ. பரப்பளவில் அமையும் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 45 புறநகர் பேருந்துகள், 11 நகரப் பேருந்துகள் என மொத்தம் 56 பேருந்துகள் இயக்க முடியும்.  தரைதளம் மற்றும் முதல்தளம் என 2,493 ச.மீ. பரப்பளவில் பிரதான கட்டடம் அமைய உள்ளது. மேலும், 107 கடைகள், 550 இரு சக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட உள்ளது.  மூன்றாம் பாலினத்தவருக்கு ஒன்று என மொத்தம் 5 கழிவறைகளும் அமைய உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நண்பனின் துரோகம் !! மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த மாற்றுத்திறனாளி
நண்பனின் துரோகம் !! மனைவியுடன் கள்ளத் தொடர்பு !! நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த மாற்றுத்திறனாளி
6 மாத கள்ளக்காதல் ! தடையாக இருந்த கணவன் ! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் ! உறைந்து போன தெலுங்கானா
6 மாத கள்ளக்காதல் ! தடையாக இருந்த கணவன் ! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் ! உறைந்து போன தெலுங்கானா
தனிமையில் உல்லாசம் !! நீ செத்து போ நான் நிம்மதியா இருப்பேன் !! ஆசை காதலி சொன்ன வார்த்தை
தனிமையில் உல்லாசம் !! நீ செத்து போ நான் நிம்மதியா இருப்பேன் !! ஆசை காதலி சொன்ன வார்த்தை
விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
Embed widget