மேலும் அறிய

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 56 கன அடியாக அதிகரிப்பு...!

கீழணையில் இருந்து தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வருவதால் மூன்று நாட்களுக்கு முன் 46 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று  தனது முழு கொள்ளளவான 47.50  அடியை எட்டியது. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.  இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு வரும். கீழனியில் இருந்து , வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 56 கன அடியாக அதிகரிப்பு...!

இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில்  40 கள அடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் அதன்படி கடந்த வாரம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியை எட்டியதால் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து சென்ற வாரம் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது இந்நிலையில் தற்பொழுது வீராணம் ஏரி முழுவதும் நிரம்பியதால் தற்பொழுது சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 56 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 56 கன அடியாக அதிகரிப்பு...!

கீழணையில் இருந்து தொடர்ந்து அதே அளவு தண்ணீர் வருவதால் மூன்று நாட்களுக்கு முன் 46 அடியில் இருந்த நீர்மட்டம் நேற்று  தனது முழு கொள்ளளவான 47.50  அடியை எட்டியது. ஏரி முழு கொள்ளளவை  எட்டியுள்ளது, ஆனாலும்  பாசனவாய்க்கால்களின் அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை, இதனிடையே பூதங்குடி வி என் என் மதகு திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது ,இந்த தண்ணீர் வெள்ளாறு அணைக்கட்டில் சேமித்து வாலாஜா ஏரிக்கு அனுப்பும் பணிகள் பொதுப்பணித்துறை மூலமாக நடைபெற்று வருகின்றனர், மேலும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைத்து சென்னிநத்தம், கிளாங்காடு, சக்தி வினாகள் ஆகிய மூன்று கிராமங்கள் பயன்பெறும் வகையில் வெல்லாற்றில்  தண்ணீரை திறந்து விடுவதன் மூலம் நிலத் தடி நீர மட்டம் உயரும் எனவும் மூன்று கிராமங்களும் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை வைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயத்திற்கு என தண்ணீர் திறக்காதது ஏமாற்றம் அளித்துள்ளது.

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 56 கன அடியாக அதிகரிப்பு...!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகர மக்களுக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது அவர்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் தான் முதல்முறையாக ஆறு மாதங்களுக்கு பிறகு குடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வீராணம் ஏரி நிரம்பியதால் சென்ற வாரம் அனுப்பட்டதை விட தற்பொழுது அதிகமாக அனுப்பப்படுகிறது இதனால் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனை தீரும் நிலை ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Embed widget