மேலும் அறிய

ED Raid: சென்னையில் கனிம வளத்துறை அலுவலகத்தில் சோதனை.. அதிரடி காட்டும் அமலாக்கத்துறை..!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்துவரும் நிலையில் கனிம வளத்துறை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

காலை முதல் சோதனை: 

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் நடத்தும் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு  உள்ள நிலையில், வழக்கு தொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை  சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 10  இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றன. அதில், தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்தினர் ஒருவரின் வீடு மற்றும் மற்றொரு தொழிலதிபர் கோவிந்தன் ஆகியோர் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, சென்னையை அடுத்த அண்ணா நகரில் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும், முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

தொடர்ச்சியாக, புதுக்கோட்டை தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவரின் அலுவலகம் உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி காட்டி வருகின்றனர். அமலாகத்துறையினர் சோதனை நடத்தும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றன. 

முன்னதாக, திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு  மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத் துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய 5 துணை ராணுவத்தினருடன் இரண்டு கார்களில் வந்து மணல் குவாரி மற்றும் மணல் கொட்டி வைத்து விற்பனை செய்யப்படும்  இடத்திலும் சோதனை செய்து வந்தனர். 

நேற்று, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதற்குள் அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சோதனை நடைபெறும் இடங்கள்: 

சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டையை தொடர்ந்து கரூர், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரி, மணல் கொள்ளை, சட்ட விரோதமாக சுரங்க முறைகேடு புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருவதாக அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 10  இடங்களில் சோதனையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சோதனையானது யார் யார் வீடுகளில் நடத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை சோதனை முடிவில் அமலாக்கத்துறை அறிகையில் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. தற்போது நடத்தப்படும் சோதனைகளின் அடிப்படையில் அங்கு கிடைக்கப் பெறும் ஆவணங்களை வைத்து மேலும் சில இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget